Aug 22, 2017

42. கூடகுல்பா

கூடகுல்பா - வெளியில் தெரியாமல் மறைந்திருக்கும் அழகிய உருண்ட கணுக்கால்களை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா


அம்பிகையின் கணுக்கால்களின் எலும்பு, மேலே முட்டாகத் தெரியாமல், சற்று சதை பிடிப்பு உள்ளனவாய் இருக்கின்றதாம்.
கணுக்கால்கள் வலுவின்றி மெலிந்து விடாமல் சதைகளால் மூடப்பட்டு உருண்டு அழகுடன் விளங்குகிறது.

அன்னையின் திருவடியை அடியார்கள் யாவரும் நன்றாக கட்டியாக பிடித்துக் கொள்வதற்கு ஏற்ப, அவள் திருவடியில் உள்ள கணுக்கால் குறைவின்றி, நிறைவாக சதைப் பகுதியாகவே அழகாகக் காட்சிக் கொடுக்கிறது.

மேலும், பக்தன் தன் காலை பிடிக்கும் போது  தன்னுடைய எலும்பை பிடித்தால் அது வலிக்கும் எனக் கருதி, சதையாக கொண்டுள்ளாள். இதில் அன்னையின் கருணை மறைந்துள்ளது. அதுவே, உருண்டையாக அழகாக சிவந்து இருக்கிறது என்று நினைக்கிறேன்.

அம்பிகையின் கணுக்கால்களை தியானம் செய்வதன் மூலம் நிறைவான வாழ்க்கைக் கிட்டும்.

இவ்வாறு வாக்தேவிகள் அம்பிகையை “கூடகுல்பா "என்று கணுக்காலினை வர்ணிக்கின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

No comments:

Post a Comment