Aug 12, 2017

31. கநகாங்கத கேயூர கமநீய புஜாந்விதா

கநகாங்கத  கேயூர  கமநீய  புஜாந்விதா - பொன்னால் ஆன தோள் வளைகளை அணிந்தவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா



லலிதாம்பிகை சதுர் புஜங்கள் கொண்டவள். நான்கு தோள்கள். தோள்களில் தோள்வளைகள் அழகு செய்கின்றன. தேவி தன்னுடைய தோள்களிலும், புஜங்களிலும் அங்கதம் மற்றும் கேயூரத்தை அணிந்திருக்கிறாள்.

பொதுவாக போர்க்களம் புகுந்து எதிரியுடன் போரிடும் போது, கவசமாக அணியும் பாதுகாப்பு அணிகலன் அங்கதம் எனப்படும். தோள்களிலும், புஜங்களிலும் அழகூட்ட அணிவது கேயூரம் எனப்படும்.

 லலிதாம்பிகை பண்டாசுரனுடன் போரிடும் போது அங்கதம், கேயூரத்தையெல்லாம் அணிந்திருந்தாள். இந்த இரண்டு ஆபரணங்களும் தங்கத்தால் ஆனவை. இவை இரண்டும் வேறு வேறு வடிவாக  இருந்தாலும் ஒரே பொருளான தங்கத்தால் ஆனது. அது போல தான் உயிரினங்களின் தோற்றம் வேறானாதாக இருந்தாலும் அவற்றின் உள்ளிருக்கும் ப்ரம்மம் ஒன்றே என்பதே தாத்பர்யம்.

அம்பிகை இவ்வாறு பொன்னால் ஆன அங்கதம் மற்றும் கேயூரத்தை அணிந்திருக்கிறாள் என்பதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "கநகாங்கத  கேயூர  கமநீய  புஜாந்விதா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

No comments:

Post a Comment