Aug 12, 2017

34. நாப்யா லவால ரோமாலி லதாபல குசத்வயீ

நாப்யா லவால ரோமாலி லதாபல குசத்வயீ - நாபி என்ற பாத்தியிலிருந்து முளைத்தெழுந்த கொடி போன்ற மெல்லிய ரோம வரிசையின் உச்சியில் பழுத்த பழங்களை ஒத்த இரு ஸ்தனங்களை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


Lalitha



சாமுத்ரிகா லட்சணப்படி பெண்களின் நாபியிலுருந்து, மேல் நோக்கி மெல்லிய ரோம வரிசைகள் காணப்படும். அவ்வரிசைகள் மார்பகங்களின் தொடக்கத்தில் முடியும்.

அவ்வாறே, அம்பிகையின் வயிற்றிலுள்ளக் கொப்புழானது குழியாக வட்டமான அழகிய பாத்தியைப் போல உள்ளது. அதிலிருந்து நெஞ்சுக் குழிவரை சன்னமாக நீண்டிருக்கும் மெல்லிய ரோம வரிசையானது அழகிய கொடியைப் போல காட்சி அளிக்கிறது. அவ்வளவு நுண்ணிய இடையை கொண்டவள். அம்பிகையின் ஸ்தனங்கள் இரண்டும் அக்கொடியின் உச்சியில் பழுத்த இரு பழங்களைப் போல இருக்கின்றது.

மேலும், குண்டலினி யோக சாஸ்திரப்படி, நாபி மணிபூரகச் சக்கரமாகவும், ஹ்ருதயம் அநாகத சக்கரமாகும். ஹ்ருதய சக்கரத்தினை தியானிக்கும் போது குண்டலினி நாபியில் இருந்து எழுந்து வந்து அநாகதத்தில் மலர்வதாக தியானிக்க வேண்டும்.

இதனை தான் வாக்தேவிகள் அம்பிகையை "நாப்யா லவால ரோமாலி லதாபல குசத்வயீ" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

No comments:

Post a Comment