சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா - சிந்தாமணி கற்களால் கட்டப்பட்ட க்ரஹத்தின் உள்ளே வீற்றிருப்பவள்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இருபந்தைந்து கோட்டைகளையும், நூறு கோபுரங்களையும் கொண்ட ஸ்ரீநகரத்தின் நடுவே மிகவும் விலை உயர்ந்த சிந்தாமணி ரத்தினங்களால் கட்டப்பட்ட மாளிகையின் உள்ளே தேவி லலிதாம்பிகை வீற்றிருக்கிறாள்.
இது ஸ்ரீநகரத்தின் வடக்கு திசையில் உள்ளது.
சிந்தாமணி என்பது ஒருவகை ரத்தின கல். அதனிடம் நாம் ஏதேனும் வேண்டும் என்று கேட்டால் அது உடனே கொடுத்து விடும். சிந்தாமணியின் குணமே அதுதான்.
சின்னஞ்சிறு கல்லாக இருக்கும் சிந்தாமணியே நாம் கேட்டதையெல்லாம் கொடுக்கும் என்றால், அம்பிகை இருப்பதோ சிந்தாமணி கிரஹத்தில் ! அப்படியானால் அவள் அனைத்தையும் தர வல்லவள் என்றே அர்த்தம். குழந்தைகள் எதையெல்லாம் கேட்கிறார்களோ, அதையெல்லாம் தருவதற்காக அம்பிகை சிந்தாமணி கிரஹத்தில் வீற்றிருக்கிறாள்.
யோக சாஸ்திரத்தின் அடிப்படையிலே பார்த்தால், ஸ்ரீபுரம் நமது மனோ நிலையாகவும் நம்முடைய எண்ணங்களை எல்லாம் மணியாக்கி (மணி மணியான சிந்தனைகளாக) அவளைப் பற்றியே நினைத்து அந்த மணிகளாலேயே ஆலயம் கட்டினால் அதுவும் சிந்தாமணி க்ருஹந்தான். அதற்குள், அதாதவது நம் சிந்தைக்குள், அவளே வந்து குடிகொண்டு விடுவாள். அப்படிப் பண்ணுவதற்கு வழியாகத்தான் வெளியிலே அவளுக்கு வாஸஸ்தானம் கூறி அதை த்யானிப்பது. முடிவில் அவள் நமக்குள்ளேயே வரவேண்டும். அப்படி வந்தால், நம் உடலையே தேவி தன் இருப்பிடமாக கொண்டு, சிந்தாமணியின் திருப்தியை அங்கேயே ஏற்படுத்துகிறாள்.
மேலும், இந்த சிந்தாமணி மாளிகையில் தான் எல்லா மந்திரங்களும் உற்பத்தியாகின்றது.
இவ்வாறு தேவி லலிதாம்பிகை சிந்தாமணி கிரஹத்தில் கேட்டதையெல்லாம் வழங்குபவளாக வீற்றிருக்கிறாள் என்பதை தான் வாக்தேவிகள் அம்பிகையை " சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா" என்று போற்றுகின்றனர்.
இந்த சிந்தாமணி க்ரஹத்தை தியானிப்பதால் மனதில் உள்ள உபாதைகள் நீங்கும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
லலிதா |
இருபந்தைந்து கோட்டைகளையும், நூறு கோபுரங்களையும் கொண்ட ஸ்ரீநகரத்தின் நடுவே மிகவும் விலை உயர்ந்த சிந்தாமணி ரத்தினங்களால் கட்டப்பட்ட மாளிகையின் உள்ளே தேவி லலிதாம்பிகை வீற்றிருக்கிறாள்.
இது ஸ்ரீநகரத்தின் வடக்கு திசையில் உள்ளது.
சிந்தாமணி என்பது ஒருவகை ரத்தின கல். அதனிடம் நாம் ஏதேனும் வேண்டும் என்று கேட்டால் அது உடனே கொடுத்து விடும். சிந்தாமணியின் குணமே அதுதான்.
சின்னஞ்சிறு கல்லாக இருக்கும் சிந்தாமணியே நாம் கேட்டதையெல்லாம் கொடுக்கும் என்றால், அம்பிகை இருப்பதோ சிந்தாமணி கிரஹத்தில் ! அப்படியானால் அவள் அனைத்தையும் தர வல்லவள் என்றே அர்த்தம். குழந்தைகள் எதையெல்லாம் கேட்கிறார்களோ, அதையெல்லாம் தருவதற்காக அம்பிகை சிந்தாமணி கிரஹத்தில் வீற்றிருக்கிறாள்.
யோக சாஸ்திரத்தின் அடிப்படையிலே பார்த்தால், ஸ்ரீபுரம் நமது மனோ நிலையாகவும் நம்முடைய எண்ணங்களை எல்லாம் மணியாக்கி (மணி மணியான சிந்தனைகளாக) அவளைப் பற்றியே நினைத்து அந்த மணிகளாலேயே ஆலயம் கட்டினால் அதுவும் சிந்தாமணி க்ருஹந்தான். அதற்குள், அதாதவது நம் சிந்தைக்குள், அவளே வந்து குடிகொண்டு விடுவாள். அப்படிப் பண்ணுவதற்கு வழியாகத்தான் வெளியிலே அவளுக்கு வாஸஸ்தானம் கூறி அதை த்யானிப்பது. முடிவில் அவள் நமக்குள்ளேயே வரவேண்டும். அப்படி வந்தால், நம் உடலையே தேவி தன் இருப்பிடமாக கொண்டு, சிந்தாமணியின் திருப்தியை அங்கேயே ஏற்படுத்துகிறாள்.
மேலும், இந்த சிந்தாமணி மாளிகையில் தான் எல்லா மந்திரங்களும் உற்பத்தியாகின்றது.
இவ்வாறு தேவி லலிதாம்பிகை சிந்தாமணி கிரஹத்தில் கேட்டதையெல்லாம் வழங்குபவளாக வீற்றிருக்கிறாள் என்பதை தான் வாக்தேவிகள் அம்பிகையை " சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா" என்று போற்றுகின்றனர்.
இந்த சிந்தாமணி க்ரஹத்தை தியானிப்பதால் மனதில் உள்ள உபாதைகள் நீங்கும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam