Nov 6, 2017

53. சிவா

சிவா - சிவம் என்னும் பரம மங்கள வடிவினள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


சிவ என்பது பரமேஸ்வரனை குறிக்கும். சிவா அம்பிகையை குறிக்கும். சிவம் என்று சொல்வதற்கும் சிவன் என்பதற்கும் சிறிது வித்தியாசம் உண்டு. சம்ஹார தொழிலுக்கு அதிபதியான ருத்ரன் அம்சமாக விளங்கும் கடவுளை தான் சிவன் என்கிறோம்.

ஆனால் ஸ்ரீவித்யா உபாஸனை படி சிவம் என்றாள் பரம்பொருள். அதாவது நிர்குண ப்ரம்மம், மங்களம். அதற்கு நிறமோ, வடிவமோ கிடையாது. அனைத்திலும் பரந்து, விரிந்து எந்தவித குணமும் இல்லாமல் உள்ள பரம்பொருளுக்கு தான் சிவம் என்று பெயர்.

அவ்வாறு எந்த சலனமும், குணமும் இல்லாத நிர்குண ப்ரம்மமான சிவம் இந்த உலகை ஸ்ருஷ்டிக்கவும், ஜீவன்களுக்கு ஓர் ஆதாரத்தை தர வேண்டும் என்பதற்காகவும், தன்னிடத்தில் இருந்து அம்பாள் வடிவை உண்டு பண்ணுகிறது. அவ்வாறு ஜகத்தை ஸ்ருஷ்டிக்க ஆசைப்பட்ட பரம்பொருளான சிவம், காமேஸ்வரன். அந்த ஆசையின் வெளிப்பாடகத் தோன்றிய வடிவம் காமேஸ்வரியான லலிதாம்பிகை.

லலிதாம்பிகை சிவம் என்னும் பரம மங்களமான குணங்களை உடையவள். "யதா சிவஸ்தா தேவி; யதா தேவி ததாசிவ:" என்கிறது லிங்க புராணம். அதாவது எந்த வடிவம் இறைவனோ அந்த வடிவம் சக்தியும் ஆவாள். சிவனிற்கும் சக்திக்கும் எந்தவொரு வேறுபாடும் இல்லை. அறியாமையினால் வேறு என்று கருதுகிறோம். சிவன் சக்தி இருவருமே ஒரே வடிவத்தினை உடையவர்கள் தான்.

இவ்வாறு சிவனின் வடிவமாகவும், மங்கள வடிவினளாகவும் லலிதாம்பிகை இருக்கிறாள் என்பதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "சிவா" என்று போற்றுகின்றனர்.

இந்த நாமாவை கூறி தினமும் அம்பிகையை தியானித்து வருபவர்  எல்லாவித மங்களங்களையும் பெறுவார்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam