Aug 12, 2017

38. ரத்ன கிங்கிணி காரம்ய ரச நாதாம பூஷிதா

ரத்ன கிங்கிணி காரம்ய ரச நாதாம பூஷிதா - ரத்தின சலங்கையுடன் விளங்கும் அழகிய அரைஞான் அணிந்தவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


பெண்கள் இடையில் அணியும் அணிகலனுக்கு ஒட்டியாணம், மேகலை என்றெல்லாம் கூறுவர். அம்பிகையின் இடையில் உள்ள ஒட்டியாணம் தங்க மயமான கொடிகளைக் கொண்டது. இதில் அழகிற்காக மணிகளும் இரத்தினங்களும் தொங்கவிடப்பட்டிருக்கின்றது.

இந்த ஒட்டியாணத்தின் மணிகள் அசையும் போது கிண்கிண் என்ற இனிய ஓசையை எழுப்பும். இதனாலயே இவைகள் கிண்கிணி மணிகள் என்று சொல்லப்படுகின்றன.

ஆதிசங்கரரும் சௌந்தர்யலஹரியில் அம்பிகையை " க்வணத் காஞ்சி தாமா - சப்திக்கின்ற தங்க சலங்கையோடு கூடிய ஒட்டியாணத்தால் அலங்கரிக்கப்பட்டவள்" என்று போற்றுகின்றார். மேலும் தேவியின் ஒட்டியாணத்தை த்யானிப்பதன் மூலம் ஜீவாத்மா பரமாத்வோடு இணையும் வாய்ப்பு கிட்டும்.

இதனை தான் வாக்தேவிகள் அம்பிகையை  " ரத்ன கிங்கிணி காரம்ய ரச நாதாம பூஷிதா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam



No comments:

Post a Comment