Aug 12, 2017

36. ஸ்தநபார தலந்மத்ய பட்டபந்த வலித்ரயா

ஸ்தநபார தலந்மத்ய  பட்டபந்த  வலித்ரயா - ஸ்தனங்களின் கனத்தினால் இடை ஒடிந்து விடாமல் காப்பதற்குக் கட்டிய முப்பட்டைகளைப் போல் விளங்கும் மூன்று மடிப்புகளை வயிற்றில் உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா


பெண்களின் வயிற்றில் மூன்று மடிப்புகள் காணப்படும். நெற்றி, கழுத்து, இடை ஆகிய பகுதிகளில் மூன்று கோடுகள் காணப்படுவது சாமுத்ரிகா லட்சணமாகும்.
இதன்படி அம்பிகையின் இடையில் மூன்று கோடுகள் காணப்படும்.

அம்பிகையின் ஸ்தன பாரத்தினால் மடியும் இடையினை தாங்கி கொள்வதற்கு, தங்கத்தினால் ஆன பட்டி அவளது வயிற்றில்  மூன்று மடிப்புகளை உருவாக்குகிறது போல் இருக்கிறது. கம்பு விரிசல் விட்டால், உடைந்து விடாமல் இருக்கக் கயிற்றால் கட்டு போடுவதுண்டு. அது போலவே அம்பிகையின் மெல்லிய இடை உடையாமல் இருக்க மூன்று கட்டுகள் போடப்பட்டது போல் விளங்குகிறது.

மேலும் ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் "தேவீ !  இந்த  ஸ்தனசுமையினால் உன்  இடுப்பு  ஒடிந்துவிழுந்துவிடப் போகிறதே என்று, உன் இடுப்பை வள்ளிக்  கொடிகளால் மூன்று சுற்றாக  சுற்றி  இருப்பது போல் தோன்றுகிறது" என்று வர்ணிக்கின்றார்.

இந்த நாமத்தின் உட்கருத்து, அம்பிகையின் எல்லையற்ற கருணையை அவளது மார்பின் பாரமாக உருவகப் படுத்தப்படுகிறது. மூன்று மடிப்புகள் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை குறிப்பிடுகிறது. அவளுடைய கருணைக்கான நேரம் மற்ற தொழில்களைவிட அதிகமானது. அவள் ஜகன் மாதா. அவளுடைய கருணையே மற்றதை விட அதிகம்.

இதனை தான் வாக்தேவிகள் அம்பிகையை "ஸ்தநபார தலந்மத்ய  பட்டபந்த  வலித்ரயா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam


No comments:

Post a Comment