இந்த்ர கோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா - இந்த்ர கோபங்கள் என்ற கார்காலத்து பூச்சிகள் மொய்க்கப் பெற்ற, மன்மதனின் அம்பாறாத் தூணிகள் போல் ப்ரகாசிக்கும் முன்னங்கால்களை உடையவள்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
அம்புகளை வைக்க அம்பறாத்தூணி இருக்கும். அம்பறாத்தூணியானது அம்புகளை வைக்க தகுந்தாற் போல் மேலே பருத்தும், கீழே சிறுத்தும் காணப்படும். மன்மதன், அம்பிகை கையில் உள்ள அதே மலர் அம்புகளை தான் வைத்திருக்கிறான். அந்த மலர் அம்புகளை வைக்க உதவும் அம்பறாத்தூணியாக தேவியின் திருக்கால்கள் இருக்கின்றதாம்.
இந்த்ர கோபங்கள் என்பது மழைக்காலத்தில் பூமியில் உற்பத்தியாகிக் காலை நேரத்தில் அழகாகத் தரையில் ஊர்ந்துக் கொண்டிருக்கும் பூச்சிகள். அந்த பூச்சிகள் மன்மதனின் அம்பாறத் தூணிகளில் மொய்த்துக் கொண்டிருக்கிறதாம். அதாவது, மலர்கள் எங்கு இருக்கிறதோ அங்கு வண்டுகள் மொய்ப்பது போல, தேவியின் திருக்கால்களான அம்பறாத்தூணியில் இந்த்ர கோபங்கள் என்னும் பூச்சிகள் மொய்த்துக் கொண்டிருக்கின்றதாம்.
மேலும், இதை ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் "தாயே! உன்னுடைய கனுக்கால்கள் பரமசிவனை வெற்றி கொள்வதற்காக, மன்மதனால் தயாரிக்கப்பட்ட அம்பறாத்தூணிபோல் தோன்றுகிறது" என்கிறார்.
அதாவது, மன்மதன் சிவபெருமானிடம் தோற்றுவிட்டக் காரணத்தால், ஈசனை வெல்ல சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அம்பிகை தன் குழந்தைகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாள். அவ்வாறு குழந்தையான மன்மதன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தன்னுடைய திருக்கால்களையே அவனுக்கு அம்பறாத்தூணியாகக் கொடுத்திருக்கிறாள். அதை மன்மதன் தனது படைக்கலமாகக் கொண்டு ஈசனை வென்று விட்டான் என்று வர்ணிக்கின்றார்.
இவ்வாறு கார்காலத்து பூச்சிகள் மொய்க்கும் அம்பறாத்தூணியாக அம்பிகையின் முன்னங்கால்கள் இருக்கின்றது என்பதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "இந்த்ர கோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா" என்று போற்றுகின்றனர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
Lalitha |
அம்புகளை வைக்க அம்பறாத்தூணி இருக்கும். அம்பறாத்தூணியானது அம்புகளை வைக்க தகுந்தாற் போல் மேலே பருத்தும், கீழே சிறுத்தும் காணப்படும். மன்மதன், அம்பிகை கையில் உள்ள அதே மலர் அம்புகளை தான் வைத்திருக்கிறான். அந்த மலர் அம்புகளை வைக்க உதவும் அம்பறாத்தூணியாக தேவியின் திருக்கால்கள் இருக்கின்றதாம்.
இந்த்ர கோபங்கள் என்பது மழைக்காலத்தில் பூமியில் உற்பத்தியாகிக் காலை நேரத்தில் அழகாகத் தரையில் ஊர்ந்துக் கொண்டிருக்கும் பூச்சிகள். அந்த பூச்சிகள் மன்மதனின் அம்பாறத் தூணிகளில் மொய்த்துக் கொண்டிருக்கிறதாம். அதாவது, மலர்கள் எங்கு இருக்கிறதோ அங்கு வண்டுகள் மொய்ப்பது போல, தேவியின் திருக்கால்களான அம்பறாத்தூணியில் இந்த்ர கோபங்கள் என்னும் பூச்சிகள் மொய்த்துக் கொண்டிருக்கின்றதாம்.
மேலும், இதை ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் "தாயே! உன்னுடைய கனுக்கால்கள் பரமசிவனை வெற்றி கொள்வதற்காக, மன்மதனால் தயாரிக்கப்பட்ட அம்பறாத்தூணிபோல் தோன்றுகிறது" என்கிறார்.
அதாவது, மன்மதன் சிவபெருமானிடம் தோற்றுவிட்டக் காரணத்தால், ஈசனை வெல்ல சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அம்பிகை தன் குழந்தைகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாள். அவ்வாறு குழந்தையான மன்மதன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தன்னுடைய திருக்கால்களையே அவனுக்கு அம்பறாத்தூணியாகக் கொடுத்திருக்கிறாள். அதை மன்மதன் தனது படைக்கலமாகக் கொண்டு ஈசனை வென்று விட்டான் என்று வர்ணிக்கின்றார்.
இவ்வாறு கார்காலத்து பூச்சிகள் மொய்க்கும் அம்பறாத்தூணியாக அம்பிகையின் முன்னங்கால்கள் இருக்கின்றது என்பதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "இந்த்ர கோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா" என்று போற்றுகின்றனர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
No comments:
Post a Comment