Aug 12, 2017

30. காமேஸ பக்த மாங்கல்ய ஸூத்ர ஸோபித கந்தரா

காமேஸ பக்த மாங்கல்ய ஸூத்ர ஸோபித கந்தரா - காமேஸ்வரர் கட்டிய மங்கல நாணுடன் ப்ரகாசிக்கும் கழுத்தினை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


அம்பிகையின் கழுத்து பளபளக்கிறது. அதன் கூடுதலான பளபளப்புக்கு காரணம் காமேஸ்வரராகிய சிவனார் கட்டிய திருமாங்கல்யமாம்.

மாங்கல்யம் கட்டும் பழக்கம் வேத காலத்தில் இருந்ததில்லை. எனினும் தென்னாடுடைய சிவன் தாலி கட்டியே திருமணம் முடித்தார்.

ஆதிசங்கரர்  "அம்மா, உன் கழுத்திலுள்ள முன்று ரேகைகளும், சிவன் உனக்கு  திருமண நாள் அன்று  அணிவித்த  மங்கள  சூத்திரத்தின்  அடையாளம்  போலும்" என்று  கூறியிருக்கிறார்.

அம்பிகை சிவனார் கட்டிய மங்கள நாணை அணிந்திருக்கிறாள். அதனால் மூன்று கோடுகள் உண்டானதாம். சாமுத்ரிகா லட்சண படி நெற்றி, கழுத்து, இடை ஆகியவற்றில் மூன்று கோடுகள் இருந்தால் அது அவர்களுடைய பாக்யங்களை குறிக்கும்.

நெற்றியில் மூன்று கோடுகள் இருந்தால் அது பரம சௌபாக்யத்தை தரவல்லது என்பதால், மூன்று விதமான ரேகைகளும் தேவியினுடைய கழுத்தில் காணப்படுகிறது என்பது ஓர் ஆச்சர்யம் ஆகாது. ஏனெனில் தேவியின் ஸ்வரூப லட்சணங்களை கொண்டு தான் சாமுத்ரிகா லட்சணம் அமைந்துள்ளது. அம்பிகை நித்ய சுமங்கலி. அவளுடைய மாங்கல்யத்தை த்யானித்து வழிபட மங்களங்கள் கூடும்.

காமேஸ்வரர் கட்டிய மங்கள நாணுடன் விளங்குகிறாள் என்பதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "காமேஸ பக்த மாங்கல்ய ஸூத்ர ஸோபித கந்தரா" என்று போற்றுகின்றனர்

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

No comments:

Post a Comment