Aug 12, 2017

39. காமேச ஜ்ஞாத சௌபாக்ய மார்தவோரு த்வயாந்விதா

காமேச ஜ்ஞாத சௌபாக்ய மார்தவோரு த்வயாந்விதா - காமேசுவரரால் அறியப்பெற்ற அழகையும், ம்ருது தன்மையையும் உடைய இரு தொடைகளை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


Lalitha


அம்பிகையின் தொடைகளின் அழகையும் ம்ருது தன்மையையும் அவளின் கணவனான காமேஸ்வரருக்கு மட்டுமே தெரியுமானது. வேறு எவராலும் அதை அறியமுடியாதாம்.

தேவியின் தொடையானது யானையின் துதிக்கைப் போல் மேல் பெருத்து வரவர சிறியதாக விளங்கி வருகிறதாம். இதை
ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் "அம்மா !  வேதநாயகியே ! உன் தொடைகள் இரண்டும்,  யானைகளின் துதிக்கைகளையும் தங்கமயமான வாழைமரத் தண்டுளையும் விட ,  மிக அழகாக இருக்கின்றன" என்று போற்றுகின்றார்.

மேலும் தேவியின் தொடைகளை த்யானிப்பதன் மூலம் மென்மையும், சௌந்தர்யமும் கிட்டும். இவ்வாறு ல்ஜகதாம்பிகையின் தொடையின் சௌந்தர்யத்தை தான் வாக்தேவிகள் "காமேச ஜ்ஞாத சௌபாக்ய மார்தவோரு த்வயாந்விதா"  என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam




No comments:

Post a Comment