🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
Lalitha |
அம்பிகையின் தொடைகளின் அழகையும் ம்ருது தன்மையையும் அவளின் கணவனான காமேஸ்வரருக்கு மட்டுமே தெரியுமானது. வேறு எவராலும் அதை அறியமுடியாதாம்.
தேவியின் தொடையானது யானையின் துதிக்கைப் போல் மேல் பெருத்து வரவர சிறியதாக விளங்கி வருகிறதாம். இதை
ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் "அம்மா ! வேதநாயகியே ! உன் தொடைகள் இரண்டும், யானைகளின் துதிக்கைகளையும் தங்கமயமான வாழைமரத் தண்டுளையும் விட , மிக அழகாக இருக்கின்றன" என்று போற்றுகின்றார்.
மேலும் தேவியின் தொடைகளை த்யானிப்பதன் மூலம் மென்மையும், சௌந்தர்யமும் கிட்டும். இவ்வாறு ல்ஜகதாம்பிகையின் தொடையின் சௌந்தர்யத்தை தான் வாக்தேவிகள் "காமேச ஜ்ஞாத சௌபாக்ய மார்தவோரு த்வயாந்விதா" என்று போற்றுகின்றனர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
No comments:
Post a Comment