Aug 12, 2017

40. மாணிக்ய மகுடாகார ஜாநுத்வய விராஜிதா

மாணிக்ய மகுடாகார  ஜாநுத்வய   விராஜிதா - மாணிக்க மகுடம் போன்ற முழங்கால் சில்லுகளை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


அம்பிகையின் சில்லுகள் சற்றுக் கடினமாகவும், சிவந்தும் காணப்படுகிறது. அவை, காலின் நடுவில் மாணிக்கத் மகுடத்தை சூட்டியது போல் தோன்றுகிறதாம்.

அம்பிகை மஹா பதிவ்ரதை. அதனால் பரம பணிவோடு பதியான காமஸ்வரனை விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணிக் கொண்டே இருப்பவள். பெண்கள் காலை மடித்து காலின் நடு பாகம் பூமியில் படுகிற மாதிரி தான்  நமஸ்கரிப்பது வழக்கம். அப்படி ஓயாமல் ஒழியாமல் அம்பாளுடைய அந்த பாகம் பூமியில் உராய்ந்து காய்ப்புக் காய்த்துப் போய் தான் முட்டியானது கெட்டி பாகமாக ஆகிவிட்டதாம். அதனால், அந்த முழங்கால் சிவந்து மாணிக்க கல் போன்று ஆகிவிட்டதாம்.

இதை ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் “பத்யு: ப்ரணதி கடிநாப்யாம்" அதாவது  "தாயே உன்  முழங்கால்கள்    உருண்டையாகவும், உன்  கணவனாகிய  பரமசிவனை ,  அடிக்கடிவணங்குவதால்  சற்று கடினமாகவும் உள்ளது அந்த முழங்கால்கள்" என்று  அம்பிகையை வர்ணிக்கிறார்.

வேதத்தை நமக்கு தந்ததும் அம்பிகைதான். அவ்வழி நடந்து காட்டவே , காலின் மத்ய பாகம் முட்டி என்பது கெட்டிப்படும் அளவுக்கு, பத்னி தர்மமாகப் பதியை நமஸ்கரிக்கிறாள்.

இவ்வாறு மாணிக்க கல்லால் செய்யப்பட்ட தொப்பிப்போல் உள்ளது அம்பிகையின் முழங்கால் சில்லுகள் என்பதை தான் வாக்தேவிகள் "மாணிக்ய மகுடாகார ஜாநுத்வய விராஜிதா" என்று தேவியை போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam




No comments:

Post a Comment