தேவ கார்ய ஸமுத்யதா - தேவர்களுக்கு நன்மை செய்யும் காரியத்தில் முயற்சி உடையவள்
Lalitha |
தேவர்கள் பண்டாசுரன் அழிவதற்காக யாகம் செய்தார்கள். அவர்களுடைய காரியத்தை ஸித்தி செய்வதற்காகவும், பண்டாசுரனை வதம் செய்வதற்காகவும், தேவர்களுடைய ராஜ்ஜியத்தை அவர்களுக்கே மீட்டு தருவதற்காகவும் அம்பிகை தோன்றினாள்.
யாரிடத்திலெல்லாம் நற்குணம் அதிகரிக்கிறதோ அவர்கள் தேவர்கள். யாரிடத்திலெல்லாம் தீமை மிகுகிறதோ அவர்கள் அசுரர்கள். ஒருவன் நல்லவனாக இருந்து, நல்ல காரியங்களை அதிகமாக செய்து, தர்ம நிலையில் நிற்பவனாக இருந்தால் அவனுடைய காரியங்களை பூர்த்தி செய்து தருவதற்காகவும், தர்ம செயல்களை ரக்ஷிப்பதற்காகவும் அம்பிகை வருவாள்.
நற்செயல்கள் புரியவே அம்பிகை நமக்கு உதவுகிறாள் என்பதை “தேவ கார்ய ஸமுத்யதா” என்று வாக்தேவிகள் அம்பிகையை போற்றுகின்றனர்.
No comments:
Post a Comment