Jun 20, 2017

4. சிதக்னிகுண்ட சம்பூதா

சிதக்னிகுண்ட சம்பூதா - சிதக்னி குண்டத்திலிருந்து  தோன்றியவள்

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
Lalitha


சித் என்றால் அறிவு.  சித்+அக்னி என்றால் அறிவு கனலில் இருந்து அம்பிகை தோன்றினாள் என்பதாகும்.

பண்டாசுரன் வதம் செய்வதற்காக அம்பிகை தோன்ற வேண்டி சிவன் மற்றும் தேவர்கள் கடலை வற்ற வைத்து யாக குண்டமாக்கி அதில் மரங்களை சமித்தாக்கி, கடல் நீரை நெய்யாக்கி யாகம் வளர்த்தனர்.இறுதியில் தேவர்களும் சிவனாரும் வேள்வியில் இறங்கினர். அப்போது தான் தேவி யாகத்தில் மேலெழும்பி வந்தாள்.
நம் உடலாகிய யாக குண்டத்தில், அறிவாகிய தீயில், கெட்ட எண்ணங்களையும் தீய குணங்களையும் ஆகுதியாக இட்டுப் பொசுக்கினால், அங்கு அம்பிகையின் தோற்றம் ஏற்படுகிறது.
அதாவது என்று  தெய்வத்திடம் நாம் நம்மை முழுமையாக அனைத்தையும் அற்பணிக்கின்றோமோ அன்று அம்பிகை நம்மிடம் தோன்றுவாள் என்பதை சிதக்னிகுண்ட சம்பூதா என்று போற்றுகின்றோம்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சஹஸ்ரநாமம்

#lalitha #sahasranamam

No comments:

Post a Comment