Jun 24, 2017

9. க்ரோதா காராங்குசோ ஜ்ஜ்வலா

க்ரோதா காராங்குசோ ஜ்ஜ்வலா - கோப  வடிவான அங்குசத்தோடு ஒளிர்பவள்.

லலிதா


அம்பிகையின் மேல் வலது கையில் அங்குசம் என்னும் ஆயுதம் உள்ளது. யானையை அடக்குவதற்கு யானை பாகன் அங்குசம் என்னும் கம்பு வைத்துக் கொள்வது உண்டு. அது போல, உலகியல் பந்தத்தால் நம்மை கட்டுகிறாள் அன்னை. அந்த பந்ததை எப்படி விலக்குவது? அதற்குத்தான் அங்குசம்.

அந்த அங்குசம் எப்படிப்பட்டதாம்?, ஜ்வலிக்கும் அங்குசமாம். எப்போதும் பளபளப்பான ஆயுதம் என்பது நன்கு தீட்டப்பட்டதாகத்தான் இருக்கும். எனவே உஜ்வலமான அங்குசம். சரி, குரோதம் எப்படி வந்தது? எந்த பந்தமும் குரோதம் உருவாவதால் அழிந்துவிடும். எனவே நம் அன்னை மாயையால் வரும் பந்தத்தை குரோதத்தால் அழித்து நம்மை வழிப்படுத்த அங்குசத்தை கொண்டிருக்கிறாள். எனவேதான் அம்பிகையை "க்ரோதா காராங்குசோ ஜ்ஜ்வலா " வாக்தேவிகள் துதிக்கின்றனர்.

அங்குசத்திற்கு அதிதேவதை ஸம்பத்கரி என்னும் சக்தி ஆவாள். இவள் அம்பிகையின் யானை படைத் தலைவி.
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam

No comments:

Post a Comment