Jun 28, 2017

12. நிஜாருண ப்ரபா பூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா

நிஜாருண ப்ரபா பூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா - தனது சிவந்த திருமேனியின் ஒளி வெள்ளத்தில் மூழ்கிய பெரிய அண்டங்களின் கூட்டத்தை உடையவள்.

Lalitha



அம்பிகை எல்லா இடங்களிலும் வ்யாபித்து இருக்கிறாள். சந்திர சூரிய குடும்பங்கள், விண்மீன்கள், நம் கண்ணில் தெரியும் ஆகாயம் ஆகிய அனைத்தும் சேர்ந்தால் அது ப்ரமாண்டம் எனப்படும். நிஜா என்றால் தனது உண்மையான, அருணா என்றால் சிவப்பு, ப்ரபா என்றால் ஒளி.

அம்பிகை அகில ப்ரமாண்ட நாயகி. அவள் ஆயிரம் சூரியனின் ஒளியுடன் வெளிப்பட்டவள். அவள் தன்னுடைய சிவப்பு நிறத்தால், அதன் ப்ரகாசத்தால் அந்த ப்ரமாண்டாத்தை முழுவதுமாக மூழ்கடிக்கிறாள். அதனால் தான் வாக்தேவிகள் அம்பிகையை "நிஜாருண ப்ரபா பூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா" என்று போற்றுகின்றனர்.

அம்பிகையை செந்நிற ஒளியுடையவளாக, சிந்தூர மேனியளாக, சிந்தூர வண்ணத்திளாக த்யானிப்பவருக்கு எல்லா சௌபாக்கியங்களும்  உண்டாகும்.


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

No comments:

Post a Comment