Jun 20, 2017

6. உத்யத்பானு ஸஹஸ்ராபா

உத்யத்பானு ஸஹஸ்ராபா - ஆயிரக்கணக்கான உதயசூரியன்  போன்ற செம்மை நிறம் உடையவள்.

Lalitha

சிதக்னிகுண்டத்தில் இருந்து அம்பிகை எழுந்த போது,ஆயிரம் சூரியர்கள் ஒன்றாக உதித்தது போன்று காட்சி தந்தாள். சூரியன் எழுந்தவுடன் இருளும், குளிரும் நீங்கி, உலகம் சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குகிறது. வாழ்க்கையின் நம்பிக்கை ஒளியாக சூரியன் எழுகிறான். அது போல் ஆயிரம் மடங்கு நம்பிக்கையூட்டி, அருள் செய்ய அம்பிகை அறிவுக்கனலிலிருந்து எழும்பி வந்தாள்.
சூரியனின் சாரதி(தேரோட்டி) அருணன் செந்நிற கதிர்களுடன் சூரியன் உதிப்பதற்கு முன்னால் தோன்றுவான். அருணனின் நிறம் சிவப்பு. அவ்வாறு கருணையின் நிறமும் சிவப்பு. அம்பிகை தோன்றுவதற்கு முன்னால் அவளுடைய கருணை தோன்றிவிடுகிறது என்பதை “உத்யத்பானு ஸஹஸ்ராபா” என்று வாக்தேவிகள் அம்பிகையை போற்றுகின்றனர்.

No comments:

Post a Comment