Jun 25, 2017

10. மனோ ரூபேக்ஷு கோதண்டா

மனோ ரூபேக்ஷு கோதண்டா - மன வடிவமான கரும்பு வில்லை உடையவள்

Lalitha


லலிதாம்பிகையின் திருமேனியில் உள்ள இடது கரத்தில் கரும்பினால் ஆன வில் இருக்கின்றது. அது வெறும் கரும்பு வில் அல்ல. நம் மனம் தான் கரும்பு வில்லாக அமைந்திருக்கிறது.

மனிதர்கள் பிற உயிரினங்களை விட உயர்ந்தவர்கள் என்கிறோம். காரணம், மனிதர்களுக்கு மனம் என்ற ஒன்று இருப்பதால் தான். மனம் உள்ளவன் மனிதன். ஒவ்வொருவரும் தம் மனம் நினைக்கின்றபடி இருக்கவும்,செய்யவும், ஒன்றை அடையவும் ஆசை படுகிறோம். மனத்தை அடக்குவது என்பது சாதாரண காரியம் இல்லை.

ஆனால் இந்த மனம் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. சிந்திப்பது மூளை என்பது மட்டுமே விஞ்ஞான ரீதியாக தெரிகிறது. ஆனால் இயக்கும் மனமோ மனிதனுக்கு கூட தெரியாமல் மனித இனம் முழுவதையும் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. பக்தர்களின் அந்த மனத்தைதான் அம்பாள் கரும்பாக வைத்திருக்கிறாள்.

ஏன் கரும்பு? கரும்பை லேசாக வளைத்தாலே போதும், அது நன்றாக மடங்கி வளையும். அழுத்தி வளைத்தால் பட்டென்று உடைந்து விடும். அதுபோல தான் மனமும். அந்த மனத்தை அம்பிகையிடம் விட்டுவிட்டால் போதும், அவள் வளைக்கின்றபடியே அந்த மனம் வளையும். அதனால் தான் வாக்தேவிகள் அம்பிகையை "மனோ ரூபேக்ஷு கோதண்டா" என்று போற்றுகின்றனர்.

அம்பிகை வைத்திருக்கும் மனமாகிய கரும்பு வில்லிற்கு அதி தேவதை, "மந்த்ரினி" ஆவாள்.

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam

No comments:

Post a Comment