ராக ஸ்வரூப பாசாட்யா - விருப்ப (ஆசை) வடிவான பாசத்தை உடையவள்.
பாசம் என்றால் கயறு என்று ஒரு அர்த்தம் உண்டு. அம்பிகையின் இடது மேல் கரத்தில் அவளது பக்தர்களின் விருப்பமாகிய பாசம் இருக்கிறது. ஐந்தொழில்களையும் செய்ய விரும்பும் விருப்பு என்னும் இச்சா சக்தி அம்பிகையின் கையில் பாசம் என்னும் ஆயுதமாக இருக்கிறது.
பாசம் என்றாலே பந்தம், கட்டுவது, நம்மை கட்டி போட்டிருக்கும் ஒன்று. கயறு நம்மை எப்படி கட்டி போட்டு விடுமோ, அவ்வாறு ஆசை என்னும் பாசம் நம்மை கட்டிவிடும். ஆசையை அடக்க வேண்டுமாயின் அம்பிகையின் அருள் வேண்டும். அதனால் வாக்தேவிகள் அம்பிகையை "ராக ஸ்வரூப பாஸாட்யா" என்று போற்றுகின்றனர்.
அம்பிகை வைத்திருக்கும் பாசத்தின் அதி தேவதை அஸ்வாரூடா ஆவாள். இவள் அம்பிகையின் குதிரை படைக்குத் தலைவி ஆவாள்.
Lalitha |
பாசம் என்றால் கயறு என்று ஒரு அர்த்தம் உண்டு. அம்பிகையின் இடது மேல் கரத்தில் அவளது பக்தர்களின் விருப்பமாகிய பாசம் இருக்கிறது. ஐந்தொழில்களையும் செய்ய விரும்பும் விருப்பு என்னும் இச்சா சக்தி அம்பிகையின் கையில் பாசம் என்னும் ஆயுதமாக இருக்கிறது.
பாசம் என்றாலே பந்தம், கட்டுவது, நம்மை கட்டி போட்டிருக்கும் ஒன்று. கயறு நம்மை எப்படி கட்டி போட்டு விடுமோ, அவ்வாறு ஆசை என்னும் பாசம் நம்மை கட்டிவிடும். ஆசையை அடக்க வேண்டுமாயின் அம்பிகையின் அருள் வேண்டும். அதனால் வாக்தேவிகள் அம்பிகையை "ராக ஸ்வரூப பாஸாட்யா" என்று போற்றுகின்றனர்.
அம்பிகை வைத்திருக்கும் பாசத்தின் அதி தேவதை அஸ்வாரூடா ஆவாள். இவள் அம்பிகையின் குதிரை படைக்குத் தலைவி ஆவாள்.
No comments:
Post a Comment