சம்பகாசோக புந்நாக சௌகந்திக லஸத்கசா - சம்பகம், அசோகம், புந்நாகம், ஸௌகந்திகம், முதலிய பூக்களுக்கு வாசனையூட்டி அழகுற விளங்கும் கூந்தலை உடையவள்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
Lalitha |
பொதுவாக மலர்களை சூடிக்கொண்டால் கூந்தலுக்கு வாசனை ஏற்படும். ஆனால் அம்பிகையின் இயற்கை மணமுடைய கூந்தல், பூக்களால் மணம் ஆக்கப்படவில்லை. அம்பிகையின் கூந்தல் மணத்தாலயே, பூக்கள் மணம் பெறுகிறது. அவள்தான் மலர்களுக்கு மணத்தை தருகிறாள்.
இதை சௌந்தர்யலஹரியில் ஆதிசங்கரர், அம்பாளின் கேசத்தின் இயல்பான நறுமணத்தை எப்படியாவது கிரஹித்துக் கொள்ள வேண்டுமென்று, தேவலோக மரங்களின் மலர்கள் ஓடிவந்து அம்பாளின் கூந்தலில் ஏறி இருக்கின்றனவாம் என்று கூறியிருக்கிறார்.
அப்படியிருக்க சம்பகம், அசோகம், புந்நாகம், சௌகந்திகம்( செங்கழுநீர்) ஆகிய பூக்கள் அம்பிகையின் கேசத்தில் இருந்து மணத்தை எடுக்கின்றன என்பதை "சம்பகாசோக புந்நாக சௌகந்திக லஸத்கசா" வாக்தேவிகள் போற்றுகின்றனர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
No comments:
Post a Comment