Jun 20, 2017

3. ஸ்ரீமத் ஸிம்ஹாசநேஸ்வரி

ஸ்ரீமத் ஸிம்ஹாசநேஸ்வரி - மேன்மை மிக்க சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ஈஸ்வரி

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா


மிருகங்களில் சிங்கம் பிரதானமாகச் சொல்லப்படுகிறது. அரசர்கள் சபையில் உட்காரும் ஆஸனமானது சிங்கத்தின் உருவங்கள் பொறிக்கப்பட்டு இருப்பதையும் அதனை ஸிம்ஹாசனம் என்பதையும் நாமெல்லாம் அறிவோம்.

அம்பிகை இந்த பிரபஞ்சத்துக்கே அரசி என்பதால் அவளது ஆசனம் ஸிம்ஹாசனமாகத்தானே இருக்க முடியும்.
லலிதாம்பிகைக்கு ஆசனம் சிம்மாசனம், வாகனம் சிம்ம வாகனம்.

லலிதாம்பிகையின் சிங்காசத்தினுடைய நான்கு கால்களும் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன் ஆகிய நால்வருமாக இருக்கின்றனர். ஸதாசிவனே மேற்பலகையாக இருக்கின்றார். இந்த ஐவரும் சேர்ந்து லலிதாம்பிகை உட்கார்ந்திருக்கும் போது சிம்மாசனமாகவும், ஸ்ரீசக்ரமென்னும் ரதத்தில் ஏறும் போதும், பக்தர்களை காக்கச் செல்லும் போதும் அந்த சிங்காசனமே சிம்ம வாகனமாக மாறி அவளை சுமந்து செல்கிறது. இந்த பெருமை பொருந்திய சிம்மாசனத்தை உடையவள் அம்பிகை என்பதால் ஸ்ரீமத்ஸிம்ஹாசநேஸ்வரி என்று போற்றப்படுகிறாள்.

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam

No comments:

Post a Comment