Jun 30, 2017

14. குருவிந்த மணிச்ரேணீ கனத் கோடீர மண்டிதா

குருவிந்த மணிச்ரேணீ கனத் கோடீர மண்டிதா - பத்மராக ரத்தினக் கற்களின் வரிசைகளால் ஜொலிக்கின்ற கிரிடத்தினால் அலங்கரிக்கப் பெற்றவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா

குருவிந்தமணி என்பது பத்மராகக் கல். சிவப்பான பத்மராக கற்கள் அம்பிகையின் கிரிடத்தில் வரிசையாக அலங்கரிக்கப் பட்டுள்ளது. அம்பிகையின் மேனியை போலவே அவளது கிரிடமும் சிவந்த ஒளியினால் மிளிர்கிறது.
பொதுவாக ஆண்கள் அணியும் கிரிடத்தை மகுடம் என்பர். அவை கேசத்தை மறைக்கும்படியாக இருக்கும். பெண்கள் அணியும் கிரிடம் கோடீரம் என்பர். அவை புஷ்ப அலங்காரத்தையும், கேசத்தின் சுருள்களையும், அழகையும் மறைக்காதபடிக்கு அமைக்கப்பட்டிருக்கும்.
பக்தர்கள் அம்பிகையின் கிரிடமான கோடீரத்தை த்யானம் செய்தால் நல்ல எண்ணங்கள் மிகும்.
அம்பிகை இந்த சிவந்த கற்கள் பதித்த கோடீரத்தை அணிந்திருக்கிறாள் என்பதை "குருவிந்த மணிச்ரேணீ கனத் கோடீர மண்டிதா" என்று வாக்தேவிகள் போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

No comments:

Post a Comment