சதுர்பாஹு சமன்விதா - நான்கு கரங்களை கொண்டவள்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
லலிதா |
சதுர்பாஹு சமன்விதா - நான்கு கரங்களை கொண்டவள்
இங்கிருந்துதான் அன்னையின் ரூப லாவண்யத்தை சொல்ல ஆரம்பிக்கிறார்கள் வாக்தேவிகள் .
எந்த ஒரு தெய்வ திருமேனியை பார்க்கும் போது சாதாரணமாக எல்லோரும் பார்ப்பது ஒரு கரம் அபய ஹஸ்தமாகவும், மற்றொரு கரம் வர ஹஸ்தமாகவும் இருக்கும். அவை மரண பயத்தை போக்கவும், வரத்தை அருளவும். நாம் அம்மா என்று அவள் கால்களில் விழும் போது அந்த பயத்தை அபய ஹஸ்தம் கொண்டு போக்குகிறாள். அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கும் போது வர ஹஸ்தம் நமக்கு வரத்தை அளிக்கிறது.
ஆனால் லலிதாம்பிகையிடம் அபய - வர ஹஸ்தம் இருக்காது. ஏனெனில் அவள் திருவடிகளே பயத்திலிருந்து காத்து விடுகிறது. அத்திருவடிகளே அவரவர் விரும்புவதற்கு அதிகமாக வரமும் அளித்து.
"அபய - வர ஹஸ்தம் காட்டி ஆள வேண்டிய அவசியம் உனக்கு இல்லை அதனால் தான் உன் திருக்கரங்களில் அதற்கான அடையாளம் இல்லை" என்று ஆதிசங்கரர் சொன்னார்.
குழந்தைக்கு தேவயானதை தேவையான நேரத்தில் கொடுப்பதற்கு தாய்க்கு தெரியாதா?
மேலும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களையும் அவளே அருள்கிறாள் என்பதை காட்டும் பொருட்டு நான்கு கைகளுடன் அம்பிகை விளங்குகிறாள். அதாவது நான்கு கரங்களை கொண்டவள் என்பதை தான் சதுர்பாஹு சமன்விதா என்று வாக்தேவிகள் அம்பிகையை போற்றுகின்றனர்.
மேலும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களையும் அவளே அருள்கிறாள் என்பதை காட்டும் பொருட்டு நான்கு கைகளுடன் அம்பிகை விளங்குகிறாள். அதாவது நான்கு கரங்களை கொண்டவள் என்பதை தான் சதுர்பாஹு சமன்விதா என்று வாக்தேவிகள் அம்பிகையை போற்றுகின்றனர்.
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
No comments:
Post a Comment