Jul 8, 2017

20. தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பூஷிதா

தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பூஷிதா - நக்ஷத்திரத்தின் ஒளியை தோற்கடிக்கும் பிரகாசத்தோடு கூடிய மூக்குத்தியினால் மிளிர்பவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


Lalitha


அம்பிகையின் மூக்குத்தியில் ஒன்று வெள்ளை கல்லால் ஆனது. மற்றொன்று சிவப்பு கல்லால் ஆனது. சிவப்புக் கல் மாணிக்கம் மற்றும் வெள்ளை கல் வைரம்.

தாரா என்பது மங்களா , சுக்லா ஆகிய இரண்டும் தேவதைகளை குறிக்கும். சுக்லா என்பது சுக்ரன் மற்றும் தாரா என்பது செவ்வாய். இந்த இரண்டு நக்ஷத்திரங்களும் அதிகம் மின்னுபவை.
மேலும் அம்பிகையின் மூக்குத்தியில்  சிவப்பு மாணிக்கம் செவ்வாயையும், வெள்ளை வைரம் சுக்ரனையும் குறிக்கின்றது.

வானில் சுக்ரன் வெண்மை ஒளியையும், செவ்வாய் சிவப்பு ஒளியையும் வழங்கும் சுடர்கள். அந்த இரு சுடர்களின் ஒளியையும் மிஞ்சி விடுகிறதாம் அம்பிகையின் இரண்டு மூக்குத்திகள்.
அதனால் தான் வாக்தேவிகள் அம்பிகையை "தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பூஷிதா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam




No comments:

Post a Comment