Jul 6, 2017

18. வக்த்ர லக்ஷ்மீ பரிவாக சலன் மீனாப லோசனா

வக்த்ர லக்ஷ்மீ பரிவாக சலன் மீனாப லோசனா - முகத்தின் அழகு வெள்ளத்தில் செல்லும் மீன்களை போன்ற கண்களை உடையவள்.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸



லலிதா

அம்பிகை மீனலோசனி. அவளின் திருமுகத்தில் அழகு பிரவகிக்கிறது. அந்த ப்ரவாகத்தில் ஓடுகின்ற மீன்கள் தான் அவளது கண்களாம்.

நீரிலுள்ள மீன்கள் தன்னுடைய முட்டைகளை ஓரிடத்தில் வைத்து அதை பார்த்து கொண்டே இருக்கும். அந்த பார்வையினாலே முட்டையிலுள்ள குஞ்சுகள் பக்குவமடைந்து வெளிவரும். அதுபோல தான் அம்பிகையும் தனது கருணை கடாக்ஷத்தால் பக்தர்களாகிய குழந்தைகளை வளர்க்கிறாள்.

மேலும் மீன்கள் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டே இருக்கும். அதுபோல   அம்பிகையின் கண்களும் எப்போதும் சலனப் பட்டுக் கொண்டே இருக்கும். அதாவது அசைந்து கொண்டிருக்கும்.
எப்போதும் அம்பிகையின் கண்கள் பக்தர்களாகிய குழந்தைகளை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டே இருக்கின்றதாம்.

பக்தர்களின் விருப்பத்தையும், அவர்களுக்கு தேவையானது என்ன என்பதையும் அறிந்து அவளுடைய கருணை கண்களே பூர்த்தி செய்து விடுமாம். அதனால் தான் லலிதாம்பிகையை "வக்த்ர லக்ஷ்மீ பரிவாக சலன் மீனாப லோசனா" என்று வாக்தேவிகள் போற்றுகின்றனர்.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

No comments:

Post a Comment