நவ வித்ரும பிம்ப ஸ்ரீ ந்யக்காரி ரதனச்சதா - புதிய பவளம், கோவை பழம் இவற்றை பழிக்க செய்யும் உதடுகளை உடையவள்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
சாதாரணமாக உதட்டின் சிவப்புக்கு பவழம், கோவைப்பழம் போன்றவற்றை உதாரணங்களாக காட்டுவார்கள். அதுவும் புதிய பவளம் மிகவும் சிவந்திருக்கும்.
மேலும், பிம்பம் என்றால் கோவை. பிம்பம் என்றாலே ப்ரதிபிம்பம் என்றும் அர்த்தம். அப்படித்தான் இந்த கோவைக்கும் பிம்பப் பேர் உண்டாயிற்று. அம்பிகை உதடுதான் அதற்கு மூல பிம்பம். அந்தக் காயின் பளபளப்பான தோலின்மேல் அம்பிகை தன் உதட்டின் ப்ரதிபிம்பம் விழச்செய்து அதைச் செக்கச் சிவக்க ஆக்கி ‘பிம்பம்’ என்கிற பெயர் பெறும்படியாகப் பண்ணியிருக்கிறாள். இருந்தாலும் அதற்கு மூல பிம்பத்தின் சிவப்பு வரவில்லையாம். அவ்வளவு சிவப்பு வாய்ந்தது அம்பிகையின் உதடுகள்.
ஸ்ரீலலிதாம்பிகையின் உதடுகள் இந்த பவழம், கோவைப்பழ சிவப்பையெல்லாம் தோற்கடித்து விட்டதாம். அவளின் செவ்விதழ்கள் இயற்கை அழகும், மிகுந்த காந்தியும் உடையது. இதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "நவ வித்ரும பிம்ப ஸ்ரீ ந்யக்காரி ரதனச்சதா" என்று போற்றுகின்றனர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
லலிதா |
சாதாரணமாக உதட்டின் சிவப்புக்கு பவழம், கோவைப்பழம் போன்றவற்றை உதாரணங்களாக காட்டுவார்கள். அதுவும் புதிய பவளம் மிகவும் சிவந்திருக்கும்.
மேலும், பிம்பம் என்றால் கோவை. பிம்பம் என்றாலே ப்ரதிபிம்பம் என்றும் அர்த்தம். அப்படித்தான் இந்த கோவைக்கும் பிம்பப் பேர் உண்டாயிற்று. அம்பிகை உதடுதான் அதற்கு மூல பிம்பம். அந்தக் காயின் பளபளப்பான தோலின்மேல் அம்பிகை தன் உதட்டின் ப்ரதிபிம்பம் விழச்செய்து அதைச் செக்கச் சிவக்க ஆக்கி ‘பிம்பம்’ என்கிற பெயர் பெறும்படியாகப் பண்ணியிருக்கிறாள். இருந்தாலும் அதற்கு மூல பிம்பத்தின் சிவப்பு வரவில்லையாம். அவ்வளவு சிவப்பு வாய்ந்தது அம்பிகையின் உதடுகள்.
ஸ்ரீலலிதாம்பிகையின் உதடுகள் இந்த பவழம், கோவைப்பழ சிவப்பையெல்லாம் தோற்கடித்து விட்டதாம். அவளின் செவ்விதழ்கள் இயற்கை அழகும், மிகுந்த காந்தியும் உடையது. இதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "நவ வித்ரும பிம்ப ஸ்ரீ ந்யக்காரி ரதனச்சதா" என்று போற்றுகின்றனர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
No comments:
Post a Comment