Jul 14, 2017

26. கற்பூர வீடிகா மோத ஸமாஹர்ஷ திகந்தரா

கற்பூர வீடிகா மோத ஸமாஹர்ஷ திகந்தரா - கற்பூர வீடிகம் என்னும் தாம்பூல நறுமணத்தால் எத்திக்கில் உள்ளோரையும் ஈர்ப்பவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha



கற்பூர வீடிகம் என்பது நறுமணம் தரும் பொருட்களை கொண்டு செய்யப்படும் தாம்பூலம். அவற்றில் வெற்றிலை, பாக்கு, ஏலம், பச்சைக் கற்பூரம், லவங்கம், குங்குமப்பூ, கஸ்தூரி, ஜாதிக்காய், ஜாதிபத்திரி போன்ற பொருள்கள் சேர்க்கப்படும். இந்த கற்பூர வீடிகத்தை அம்பிகை சுவைக்கிறாள்.
மேலும், அம்பிகை இந்த கற்பூர வீடிகத்தை சுவைக்கும் போது வரும் வாசனை இந்த ப்ரபஞ்சத்தையே நறுமணமாக்குகிறது. அதனால் திசையெங்கும் நறுமணம் பரவுகிறது. அத்துடன், அந்த நறுமணமானது அனைவரையும் ஈர்க்கிறது.
அதாவது, அறியாமை உடைய மனிதனை அறிவாகிய வாசனையால் கவர்கிறாள் அம்பிகை. புத்தி உடைய மனிதன் தனது பக்தியால் அம்பிகையை அடைகிறான். ஆனால் அறிவு இல்லாதவனோ அம்பிகையை அடைவதற்கு ஒரு உந்துகோல் தேவைப்படும். அந்த உந்துகோலே தேவியின் தாம்பூல வாசனை. அந்த வாசனையே எத்திக்கில் உள்ளோரையும் அவள் பக்கம் சேர்த்துவிடுமாம்.
அதனால் தான் வாக்தேவிகள் அம்பிகையை "கற்பூர வீடிகா மோத ஸமாஹர்ஷ திகந்தரா" என்று போற்றுகின்றனர். மேலும் அம்பிகையின் தாம்பூல ரஸத்தை பருகியவர்கள் மிகப்பெரிய கவிஞர்களாவார்கள்.
திருவானைக்காவலில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரி அம்மையின் தாம்பூல ரஸத்தை உண்டுதான் காளமேகம் பெரும் கவிஞர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

1 comment:

  1. திகந்தரா என பெண் குழந்தைக்கு பெயர் வைக்கலாமா?

    ReplyDelete