கதம்ப மஞ்ஜரி க்லுப்த கர்ண பூர மனோஹரா -மனதை கவரும் அழகுடன் கதம்ப பூவை செவிப் பூவாக உடையவள்.
மஞ்சரி என்றால் பூங்கொத்து என்று பொருள். பழமைக் காலத்தில் பெண்கள் இயற்கையான மலர்களை கொண்டு அவர்கள் காதுகளை அலங்கரித்துக் கொள்ள விரும்புவதுண்டு.
காது மடல்களின் கீழ்ப்பகுதியில் அணிவது தோடு. அங்கிருந்து மேல் நோக்கி வரிசையாக சிலபேர் துளையிட்டு அதில் நகை போடுவதுண்டு. அந்த மாதிரி அணிய கூடியது தான் செவிப்பூக்கள்.
அம்பிகை ஸ்ரீபுரத்தில் உள்ள கதம்ப மரத்தின் பூங்கொத்தினை செவிப்பூவாக அணிந்திருக்கிறாள். அந்த செவிப்பூவும் அதன் நறுமணமும் பார்ப்பவரின் மனதை கவர்கிறதாம். அந்த பூக்களானது அம்பிகையின் செவியில் பட்டதாலே மிகுந்த தெய்வீக நறுமணத்தை பெறுகிறது. இதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "கதம்ப மஞ்ஜரி க்லுப்த கர்ண பூர மனோஹரா" என்று போற்றுகின்றனர்.
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
Lalitha |
மஞ்சரி என்றால் பூங்கொத்து என்று பொருள். பழமைக் காலத்தில் பெண்கள் இயற்கையான மலர்களை கொண்டு அவர்கள் காதுகளை அலங்கரித்துக் கொள்ள விரும்புவதுண்டு.
காது மடல்களின் கீழ்ப்பகுதியில் அணிவது தோடு. அங்கிருந்து மேல் நோக்கி வரிசையாக சிலபேர் துளையிட்டு அதில் நகை போடுவதுண்டு. அந்த மாதிரி அணிய கூடியது தான் செவிப்பூக்கள்.
அம்பிகை ஸ்ரீபுரத்தில் உள்ள கதம்ப மரத்தின் பூங்கொத்தினை செவிப்பூவாக அணிந்திருக்கிறாள். அந்த செவிப்பூவும் அதன் நறுமணமும் பார்ப்பவரின் மனதை கவர்கிறதாம். அந்த பூக்களானது அம்பிகையின் செவியில் பட்டதாலே மிகுந்த தெய்வீக நறுமணத்தை பெறுகிறது. இதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "கதம்ப மஞ்ஜரி க்லுப்த கர்ண பூர மனோஹரா" என்று போற்றுகின்றனர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
No comments:
Post a Comment