Jul 6, 2017

19. நவ சம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா

நவ சம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா - புதிதாக மலர்ந்த செண்ப பூப்போன்று ஒளிர்கின்ற மூக்குத் தண்டின் அழகுடன் திகழ்பவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


செண்பப் பூவானது மென்மை, நிறம், ஒளி, வடிவம் ஆகிய அனைத்தும் உடையது.  செண்பக பூவை பெண்களின் மூக்கிற்கு உவமை படுத்துவது உண்டு.

அம்பிகையின் நாசியும்(மூக்கு)  புதிதாக  மலர்ந்த செண்பக மலர்போன்று இருக்கின்றதாம். அது நாசியானது பிரகாசம் அடைந்தும் இருக்கிறது. அதனால் தான் வாக்தேவிகள் அம்பிகையை "நவ சம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

No comments:

Post a Comment