தாடங்க யுகளிபூத தபநோடுப மண்டலா - சூரிய சந்திர மண்டலங்களயே இரு தோடுகளாக உடையவள்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
தபனன் என்றால் சூரியன், உடுபன் என்றால் சந்திரன். அம்பிகை தனது இடது காதில் சந்திரனையும் வலது காதில் சூரியனையும் தாடங்கங்களாக அணிந்திருக்கிறாள்.
அக்கால பெண்கள் காதில் பனை ஓலையை தான் காதணியாக அணிந்தனர். இன்றும் அம்பிகைக்கு காதோலையும் கருகுமணியும் வைத்து வழிபடும் வழக்கம் உண்டு.
தாலி, தோடு இரண்டும் விசேஷமான ஸெளமாங்கல்யா ஆபரணங்களாகும். அதுவும் அம்பிகையின் தாடங்கத்திற்கு வெகு சிறப்பு உண்டு.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, ஆலகால விஷம் வந்தது. சிவபெருமான் அந்த விஷத்தை அப்படியே விழுங்கிவிட்டார். பின்னர் தேவர்கள் அமுதத்தை அருந்தினர். அந்த அமுதம் உண்ட தேவர்கள் கூட ப்ரளய காலத்தில் அழிந்து போனார்கள். ஆனால் நஞ்சை உண்ட சிவபெருமான் அழியவில்லை. அதற்கு காரணம் என்ன என்றால் அம்பிகையின் காதுகளில் உள்ள தாடங்கத்தின் மேன்மையே.
அம்பிகையே மங்களமானவள். ஸர்வ மங்கள மாங்கல்யே என்றே அவளை போற்றுவர். மங்களமே வடிவான அம்பிகை மகா சுமங்கலி. அவளுடைய சௌமங்கலியத்துக்கு எப்படி பங்கம் உண்டாக முடியும்? இதனால்தான் அவளுடைய தாடங்க மகிமையால், ஆலகால விஷம் சாப்பிட்டுகூடப் பரமேசுவரன் சௌக்கியமாகவே இருக்கிறார்.
இதனால் தான் வாக்தேவிகள் அம்பிகையை "தாடங்க யுகளிபூத தபநோடுப மண்டலா" என்று போற்றுகின்றனர்.
மேலும், திருக்கடவூரில் அபிராமி பட்டருக்கு ஆடி அமாவாசை அன்று தனது இடது காதில் உள்ள சந்திரனை வீசியே முழு நிலவை காட்டினாள் என்பது குறிப்பிடத்தக்கது.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
லலிதா |
தபனன் என்றால் சூரியன், உடுபன் என்றால் சந்திரன். அம்பிகை தனது இடது காதில் சந்திரனையும் வலது காதில் சூரியனையும் தாடங்கங்களாக அணிந்திருக்கிறாள்.
அக்கால பெண்கள் காதில் பனை ஓலையை தான் காதணியாக அணிந்தனர். இன்றும் அம்பிகைக்கு காதோலையும் கருகுமணியும் வைத்து வழிபடும் வழக்கம் உண்டு.
தாலி, தோடு இரண்டும் விசேஷமான ஸெளமாங்கல்யா ஆபரணங்களாகும். அதுவும் அம்பிகையின் தாடங்கத்திற்கு வெகு சிறப்பு உண்டு.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, ஆலகால விஷம் வந்தது. சிவபெருமான் அந்த விஷத்தை அப்படியே விழுங்கிவிட்டார். பின்னர் தேவர்கள் அமுதத்தை அருந்தினர். அந்த அமுதம் உண்ட தேவர்கள் கூட ப்ரளய காலத்தில் அழிந்து போனார்கள். ஆனால் நஞ்சை உண்ட சிவபெருமான் அழியவில்லை. அதற்கு காரணம் என்ன என்றால் அம்பிகையின் காதுகளில் உள்ள தாடங்கத்தின் மேன்மையே.
அம்பிகையே மங்களமானவள். ஸர்வ மங்கள மாங்கல்யே என்றே அவளை போற்றுவர். மங்களமே வடிவான அம்பிகை மகா சுமங்கலி. அவளுடைய சௌமங்கலியத்துக்கு எப்படி பங்கம் உண்டாக முடியும்? இதனால்தான் அவளுடைய தாடங்க மகிமையால், ஆலகால விஷம் சாப்பிட்டுகூடப் பரமேசுவரன் சௌக்கியமாகவே இருக்கிறார்.
இதனால் தான் வாக்தேவிகள் அம்பிகையை "தாடங்க யுகளிபூத தபநோடுப மண்டலா" என்று போற்றுகின்றனர்.
மேலும், திருக்கடவூரில் அபிராமி பட்டருக்கு ஆடி அமாவாசை அன்று தனது இடது காதில் உள்ள சந்திரனை வீசியே முழு நிலவை காட்டினாள் என்பது குறிப்பிடத்தக்கது.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
No comments:
Post a Comment