Jul 18, 2017

28. மந்தஸ்மித பிரபா பூர மஜ்ஜத் காமேச மாநஸா

மந்தஸ்மித  பிரபா பூர மஜ்ஜத் காமேச மாநஸா - புன்சிரிப்பின் ஒளிப்பிரவாகத்தில் காமேசுவரரின் மனம் முழுகிக் கொண்டிருக்கச் செய்தவள்.
ஸ்மிதம் என்றால் சிரிப்பு என்று பொருள். மந்த ஸ்மிதம் என்றால் மயக்குகின்ற சிரிப்பு என்ற பொருளாகும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha

லலிதாம்பிகை  அக்னிக்குண்டத்தில் இருந்து வெளிப்பட்டவுடன், சிவனும் காமேஸ்வரராக தோன்றினார். அம்பிகை தோன்றும் போது அவளுடைய புன் சிரிப்பின் அழகொளியானது பெருகி ஓடுகின்றது. அப்போது காமேஸ்வரனின் மனம் அந்த பெரும் ஒளி வெள்ளத்தில் மூழ்கி, அதிலிருந்து வெளி வர முடியாமல் அதிலேயே திளைத்திருக்கின்றதாம்.
ஆதிசங்கரரும் அம்பிகையின் புன்சிரிப்பை அமுதம் போன்ற முழு நிலவின் கிரணங்கள் என்று போற்றுகிறார்.
அம்பிகை தன் வசீகர புன் சிரிப்பால்,  பக்தர்களை கவர்ந்து அவர்களுக்கு ஞானம் அளித்து, இறுதியில் முக்தியை தருகிறாள். இதனைத்தான் வாக்தேவிகள் அம்பிகையை "மந்தஸ்மித  பிரபா பூர மஜ்ஜத் காமேச மாநஸா" என்று போற்றுகின்றனர்.
காஞ்சி  மூக கவி அன்னை காமாட்சியின் புன்முறுவலை வருணித்து 'மந்தஸ்மித சதகம்' என்னும் தலைப்பில் நூறு பாடல்கள் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

No comments:

Post a Comment