ஸர்வாருணா - எல்லாம் சிவப்பாகவே இருப்பவள்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொதுவாக பரமாத்மாவுக்கு எந்த குணமோ, நிறமோ, வடிவமோ கிடையாது. அவ்வாறு எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மா தன்னை ஒரு சிறிய வடிவத்துக்குள் சுருக்கிக் கொண்டு உலகினை படைக்கிறார். இந்த உலகையும், அதில் வாழ ஆத்மாக்களையும் படைக்க பரமாத்மா பெண் வடிவமாக மாறிக்கொண்டது. அப்படி மாற்றி கொண்ட வடிவம் தான் லலிதாம்பிகை.
இவ்வாறு சிருஷ்டிக்கான செயல் வடிவில் தேவி வருகிறதால், அந்த வடிவில் வரும் போது அவள் கருமை நிறமாக வர முடியாது. காரணம் கருமை தாமஸத்திற்கான நிறம். தோன்றுவதற்கான நிறத்தில் வர வேண்டும் என்பதாலும், இந்த பூமியின் மீது வைத்த கருணையாலும் அம்பிகை அருண நிறத்தவளாக வந்தவள் தான் லலிதாம்பிகை.
மேலும், கருணையின் நிறம் சிவப்பு. அம்பிகையோ கருணையின் மொத்த உருவம். ஆக அம்பிகைக்கு எல்லாம் சிவப்பாகவே திகழ்கின்றது. சிவப்பு என்றால் அடர் சிவப்பல்ல; வெளிர் சிவப்பு. அதாவது சூரியன் உதிக்கின்ற நிறம். அடர் சிவப்பு சிறிது உக்கிரமானது. அது ராஜஸம் குடிக்கொண்ட நிறம். ராஜஸம் இருக்கும் போது மென்மையான தொடக்கம் இருக்க இயலாது. ஆனால் வெளிர் சிவப்பு தோற்றத்திற்கான நிறம்.
ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில்(93) "கருணா காசித் அருணா" என்கிறார். அதாவது, தேவியின் கருணை சிவந்த வர்ணமுள்ளதாகவும், அதனை சாதாரண அறிவால் அறிய முடியாததாகும் என்று கூறுகிறார்.
ஆக அம்பிகையின் திருமேனி, அவள் அணிந்துள்ள ஆடைகள், ஆபரணங்கள், பூமாலைகள், கற்பூர வீடீகம் போட்டு சிவந்த உதடுகள், அவள் வீற்றிருக்கும் சிம்ஹாசனம், ஆயிரம் இதழ் தாமரை, பட்டு மெத்தைகள், மேல் விரிப்புகள், பிரகாசம் என அனைத்தும் சிவப்பு நிறமானவைகள் தான்.
எல்லாம் சிவந்த நிறமாக லலிதாம்பிகை திகழ்வதால் தான் தேவியை வாக்தேவிகள் "ஸர்வாருணா" என்று வர்ணிக்கின்றனர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
Lalitha |
பொதுவாக பரமாத்மாவுக்கு எந்த குணமோ, நிறமோ, வடிவமோ கிடையாது. அவ்வாறு எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மா தன்னை ஒரு சிறிய வடிவத்துக்குள் சுருக்கிக் கொண்டு உலகினை படைக்கிறார். இந்த உலகையும், அதில் வாழ ஆத்மாக்களையும் படைக்க பரமாத்மா பெண் வடிவமாக மாறிக்கொண்டது. அப்படி மாற்றி கொண்ட வடிவம் தான் லலிதாம்பிகை.
இவ்வாறு சிருஷ்டிக்கான செயல் வடிவில் தேவி வருகிறதால், அந்த வடிவில் வரும் போது அவள் கருமை நிறமாக வர முடியாது. காரணம் கருமை தாமஸத்திற்கான நிறம். தோன்றுவதற்கான நிறத்தில் வர வேண்டும் என்பதாலும், இந்த பூமியின் மீது வைத்த கருணையாலும் அம்பிகை அருண நிறத்தவளாக வந்தவள் தான் லலிதாம்பிகை.
மேலும், கருணையின் நிறம் சிவப்பு. அம்பிகையோ கருணையின் மொத்த உருவம். ஆக அம்பிகைக்கு எல்லாம் சிவப்பாகவே திகழ்கின்றது. சிவப்பு என்றால் அடர் சிவப்பல்ல; வெளிர் சிவப்பு. அதாவது சூரியன் உதிக்கின்ற நிறம். அடர் சிவப்பு சிறிது உக்கிரமானது. அது ராஜஸம் குடிக்கொண்ட நிறம். ராஜஸம் இருக்கும் போது மென்மையான தொடக்கம் இருக்க இயலாது. ஆனால் வெளிர் சிவப்பு தோற்றத்திற்கான நிறம்.
ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில்(93) "கருணா காசித் அருணா" என்கிறார். அதாவது, தேவியின் கருணை சிவந்த வர்ணமுள்ளதாகவும், அதனை சாதாரண அறிவால் அறிய முடியாததாகும் என்று கூறுகிறார்.
ஆக அம்பிகையின் திருமேனி, அவள் அணிந்துள்ள ஆடைகள், ஆபரணங்கள், பூமாலைகள், கற்பூர வீடீகம் போட்டு சிவந்த உதடுகள், அவள் வீற்றிருக்கும் சிம்ஹாசனம், ஆயிரம் இதழ் தாமரை, பட்டு மெத்தைகள், மேல் விரிப்புகள், பிரகாசம் என அனைத்தும் சிவப்பு நிறமானவைகள் தான்.
எல்லாம் சிவந்த நிறமாக லலிதாம்பிகை திகழ்வதால் தான் தேவியை வாக்தேவிகள் "ஸர்வாருணா" என்று வர்ணிக்கின்றனர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
No comments:
Post a Comment