Oct 21, 2017

51. ஸர்வாபரண பூஷிதா

ஸர்வாபரண பூஷிதா - எல்லாவித அணிகலன்களாலும் அலங்கரிக்கப் பெற்றவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


நவரத்தின கிரீடம், காதில் தாடங்கம், மூக்கில் மூக்குத்தி, பொன்னால் ஆன கேயூரம், கைகளில் மங்கள ஒலி எழுப்பும் வளையல்கள், பத்து விரல்களிலும் மோதிரம், கழுத்தில் தாலி, நவரத்தினம் பதித்த அட்டிகை, முத்து மாலைகள், பலவிதமான மாலைகள், ஓட்டியாணம், நவமணிகளால் ஆன சலங்கைகள் என்று பலவித ஆபரணங்கள் அணிந்திருக்கிறாள் லலிதாம்பிகை.

குறைவற்ற அழகான அங்க அமைப்பை உள்ள தேவிக்கு எல்லா ஆபரணங்களும் மேலும் அழகூட்ட முயற்சி செய்கின்றன. ஆனால் அவற்றால் முடியவில்லை. அம்பிகை அதை அணிந்ததால் ஆபரணங்கள் அழகு பெற்று கொண்டிருக்கிறது.

தேவியணியும் பல ஆபரணங்கள் சூடாமணி முதல் பாதாங்குலீயகம் வரை கல்பஸூத்ரம், காளிகா புராணம் முதலியவைகளில் கூறப்பட்டுள்ளன.
காளிகா புராணம், அன்னை 40 விதமான ஆபரணங்களை தரித்துக் காட்சிக் கொடுபாள் என்று கூறுகிறது. மேலும், மஹிஷாசுரனை சம்ஹரிக்க காளியை தேவர்கள் ஆவாகனம் செய்யும் போது, விஸ்வகர்மாவும் குபேரனும் அவளுக்கு பல ஆபரணங்களையும் கொடுத்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு தேவி சகலவிதமான ஆபரணங்களை அணிந்திருக்கிறாள் என்பதை தான் வாக்தேவிகள் அம்பிகையை " ஸர்வாபரண பூஷிதா " என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

No comments:

Post a Comment