Oct 28, 2017

52. சிவ காமேஸ்வராங்க ஸ்தா

சிவ காமேஸ்வராங்க ஸ்தா - காமேஸ்வரராகிய சிவனின் மடியில் வீற்றிருப்பவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha



அம்பிகையின் இருப்பிடம் இந்த நாமாவில் கூறப்பட்டிருக்கிறது. லலிதாம்பிகை காமேஸ்வரராகிய சிவனின் இடது தொடையில் அமர்ந்திருக்கிறாள். இவ்வாறு தேவி அமர்ந்திருப்பது சகுண வடிவம். சிவன் பிரகாச வடிவம் அதாவது ஒளியுடைய வடிவம். சக்தி சிவனுடைய  விமர்ச வடிவம்.  அதாவது ஒளியின் அசைவாக சக்தி இருக்கிறாள்.

தேவி லலிதாம்பிகை சிவனின் இடது தொடையில் அமர காரணம் இதயம் இடதுபுறத்தில் இருப்பதால் தான். இன்னும் சொன்னால், சிவனின் இதயமே அம்பிகை தான். 

சிவா என்றால் மங்களம் என்று பொருள். ஈஸ்வரன் என்றால் அனைத்தையும் ஆள்பவர் என்று பொருள். மேலும், காமம் என்றால் அழகு, ஆசை, மன்மதன் என்பனவற்றை குறிக்கும். காம என்றால் அறிவு என்றும் குறிக்கும். அறிவு என்பது சிவனுடைய ஒரு வடிவம். இதயத்தினாலும் மனதாலும் அறியப்படுவது அறிவு. சக்தி இதயமாக இருந்து நமக்கு ஞானமாகிய அறிவை வழங்குகிறாள். இந்த ஜகத்தை சிருஷ்டிக்க ஆசைப்பட்ட சிவம் தான் காமேஸ்வரன். அந்த ஆசையின் வெளிப்பாடாகத் தோன்றியவள் தான் காமேஸ்வரி. இந்த நாமத்தில் சகுண ப்ரம்மத்தின் அனைத்து தன்மைகளும் விளக்கப்படுகிறது.

சிவகாமேஸ்வனாக உள்ள தனது பர்த்தாவின் திருத்தொடையில் வீற்றிருக்கிறாள். இதை தான் வாக்தேவிகள் "சிவ காமேஸ்வராங்க ஸ்தா" என்று அம்பிகையை போற்றுகின்றனர். இவ்வாறு இந்த வடிவத்தில் லலிதாம்பிகையை தியானம் செய்வது உயர்ந்த முறை. 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

No comments:

Post a Comment