அநவத்யாங்கி - குற்றம் குறை ஒன்றும் இல்லாத அங்கங்களை உடையவள்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
நிர்குண ப்ரம்மம் ( குணங்கள் இல்லாத ), சகுண ப்ரம்மம் ( குணங்கள் உடைய ) ஆகிய இரண்டும் தேவியின் வடிவம் தான். சகுண ப்ரம்மத்தை பற்றி அறியும் போது குணமும், வடிவமும் கூறப்படுகிறது. இங்கு சகுண ப்ரம்மமான தேவியின் உருவத்தை அறிகிறோம். ப்ரம்மம் பூரணமானவையாதலால், தேவியின் அங்கங்கள் அனைத்தும் பூரணமானவை. குறை இல்லாதவை.
அம்பிகை குறை காண இயலாத வடிவம் உடையவள். எல்லாவிதமான லக்ஷணங்களோடும் கூடிய அழகிய அவயங்களை கொண்டவள். தேவியின் அனைத்து அங்கங்களும் சாமுத்ரிகா லக்ஷண சாஸ்த்திரத்திற்கு அமைய பூரணம் ஆனவை.
அவள் அழகே உருவானவள். எந்த பக்ஷணமானாலும் அதற்குத் தித்திப்பைத் தருவது சர்க்கரை என்கிறமாதிரி, நாம் எங்கெங்கே எந்தெந்த அழகைக் கண்டாலும் அதையெல்லாம் அழகாக்கும் தாய் அவள்தான். பிரம்ம சக்தியான அவளுடைய பூரண அழகின் துளித்துளிதான் மற்ற அழகுகளிலெல்லாம் தெறித்திருக்கிறது. இப்படிப்பட்ட பூரண அழகில் எவ்வாறு குறை இருக்க முடியும்? அழகின் பூரணமே அம்பிகை தான்.
இவ்வாறு கேசாதி பாதம், பாதாதி கேசம் என்று எப்படி பார்த்தாலும் எந்த ஒரு அங்கத்திலும் குறை காண முடியாத அழகான வடிவம் உடையவள் லலிதாம்பிகை என்பதை தான் வாக்தேவிகள் "அநவத்யாங்கி" என்று அம்பிகையை போற்றுகின்றனர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
லலிதா |
நிர்குண ப்ரம்மம் ( குணங்கள் இல்லாத ), சகுண ப்ரம்மம் ( குணங்கள் உடைய ) ஆகிய இரண்டும் தேவியின் வடிவம் தான். சகுண ப்ரம்மத்தை பற்றி அறியும் போது குணமும், வடிவமும் கூறப்படுகிறது. இங்கு சகுண ப்ரம்மமான தேவியின் உருவத்தை அறிகிறோம். ப்ரம்மம் பூரணமானவையாதலால், தேவியின் அங்கங்கள் அனைத்தும் பூரணமானவை. குறை இல்லாதவை.
அம்பிகை குறை காண இயலாத வடிவம் உடையவள். எல்லாவிதமான லக்ஷணங்களோடும் கூடிய அழகிய அவயங்களை கொண்டவள். தேவியின் அனைத்து அங்கங்களும் சாமுத்ரிகா லக்ஷண சாஸ்த்திரத்திற்கு அமைய பூரணம் ஆனவை.
அவள் அழகே உருவானவள். எந்த பக்ஷணமானாலும் அதற்குத் தித்திப்பைத் தருவது சர்க்கரை என்கிறமாதிரி, நாம் எங்கெங்கே எந்தெந்த அழகைக் கண்டாலும் அதையெல்லாம் அழகாக்கும் தாய் அவள்தான். பிரம்ம சக்தியான அவளுடைய பூரண அழகின் துளித்துளிதான் மற்ற அழகுகளிலெல்லாம் தெறித்திருக்கிறது. இப்படிப்பட்ட பூரண அழகில் எவ்வாறு குறை இருக்க முடியும்? அழகின் பூரணமே அம்பிகை தான்.
இவ்வாறு கேசாதி பாதம், பாதாதி கேசம் என்று எப்படி பார்த்தாலும் எந்த ஒரு அங்கத்திலும் குறை காண முடியாத அழகான வடிவம் உடையவள் லலிதாம்பிகை என்பதை தான் வாக்தேவிகள் "அநவத்யாங்கி" என்று அம்பிகையை போற்றுகின்றனர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
No comments:
Post a Comment