🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
Lalitha |
ஹம்ஸம் என்றால் அன்னப்பக்ஷி. பெண்களின் நடை அழகுக்கு அதிகபட்ச உவமையாக அன்னப்பறவையை கூறுவது உண்டு. அம்பிகையின் நடையோ அன்னப்பறவையை விட அழகானது. தேவி யாக குண்டத்தில் இருந்து வெளிப்பட்டு தேவர்களை நோக்கி நடந்தாள். அப்போது அவளுடைய நடை அன்னப்பறவையை விட மிக அழகாகவும், மெதுவாகவும் இருந்ததாம்.
அன்னப்பறவை, தேவியின் நடை அழகைப் பார்த்து தானும் அதுப்போல நடக்க முயற்சி செய்து கொண்டு இருக்கின்றனவாம். அவளுடைய சரணங்கள் கருணைக் கொண்டு அந்த அன்னப்பறவைகளுக்கு கற்று கொடுக்கின்றதால் தான் அன்னப்பக்ஷிகள் நடக்க முயற்சி செய்கின்றதாம்.
ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் அம்பிகையை "தாயே ! உன்னுடைய அழகான நடையினைப் பார்த்து, தானும் அதைக் கற்றுக் கொள்ள நினைத்து, உன் வீட்டிலுள்ள அன்னப்பட்சிகள், துள்ளித்துள்ளி நடந்து , உன் அழகு நடையைப் பின்பற்றி, உன்னைப் போல் தானும் நடக்க பழக்கப் படுத்திக் கொள்கின்றன. நீ நடக்கும் பொழுது உன் தண்டையிலுள்ள பத்மராகக் கற்கள் எழுப்பும் ஓசையானது, அந்த அன்னப்பக்ஷிகளுக்கு மறைமுகமாக நடப்பதற்குப் பாடம் சொல்லித் தருவது போல் உள்ளது" என்று வர்ணிக்கிறார்.
இவ்வாறு அன்னையின் நடையே அன்னநடை என்பதை வாக்தேவிகள் "மராளி மந்த கமநா" என்று அம்பிகையை போற்றுகின்றனர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
No comments:
Post a Comment