Sep 8, 2017

46. சிஞ்ஞாத மணி மஞ்சீர மண்டித ஸ்ரீ பதாம்புஜா

சிஞ்ஞாத மணி மஞ்சீர மண்டித ஸ்ரீ பதாம்புஜா - ஒளிரும் ரத்தின பரல்களை கொண்ட சிலம்புகளால் அலங்கரிக்கப்பட்ட பாதங்களை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


அம்பிகையின் சிலம்பு ஒளி வீசும் ரத்தினங்களால் ஆனவை. சிலம்பு, தண்டை, பாடகம், கொலுசு போன்றவை மங்கள ஒலியை எழுப்புபவை. பெண்கள் நடக்கும்பொழுது ஒருவித இனிய ஒலியை எழுப்பும்.

ஆடும்பொழுது தாளத்திற்கேற்ப ஒலியெழுப்பவல்லது சிலம்பு. அவள் ஆட்டத்தில் எழும் ஒலியாலே, இந்த பிரபஞ்சத்தை உருவாக்குகிறாள் அம்பிகை.

வெள்ளி குளிர்ச்சி தரும் உலோகம். வெள்ளி நகைளை அணிவதால் ஆயுள் விருத்தியாகும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அதனால், வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டு கொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை உறுதிப்படுத்தவும் கொலுசு பயன்படுகிறது. எனவே, பெண்கள் கொலுசு அணிய வேண்டும் என்று காட்டுகிறாள் அம்பிகை.

அவள் சிலம்பின் ஒலி பக்தர்களின் துன்பங்களை விரட்டும். மங்களத்தை வழங்கும். இவ்வாறு தேவி அணிந்திருக்கும் சிலம்பு ஒளி வீசிக் கொண்டிருக்கிறது என்பதை தான் வாக்தேவிகள் "சிஞ்ஞாத மணி மஞ்சீர மண்டித ஸ்ரீ பதாம்புஜா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

No comments:

Post a Comment