Apr 12, 2018

55. ஸுமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா


ஸுமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா - மேரு மலையின் நடு சிகரத்தில் வீற்றிருப்பவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


லலிதாம்பிகை அழகிய மேரு மலையின் நடுவில் வசிப்பவள். மேரு மலையின் உச்சியில் ஆயிரம் சிகரங்கள் உள்ளன. அவற்றின் நடுவில் நான்கு சிகரங்கள் மிக பெரியது. அதில் ஒரு சிகரம் மத்தியிலும், அவற்றை சுற்றி மூன்று சிகரங்கள் முக்கோணம் போல் இருக்கும். அதில் கிழக்கில் உள்ள சிகரத்தில் ப்ரம்மாவின் சத்யலோகமும், தென்மேற்கில் உள்ள சிகரத்தில் விஷ்ணுவின் வைகுண்டமும், வடமேற்கில் உள்ள சிகரத்தில் சிவனின் கைலாயமும் உள்ளது. அந்த மூன்று சிகரங்களின் நடுவில் உள்ள பெரிய சிகரத்தில் தான் லலிதாம்பிகையின் பட்டணமான ஸ்ரீநகரம் உள்ளது.
இம்மேருமலை சூக்ஷ்ம, ஸ்தூல, தேவ லோகங்களுக்கும், இப்பரபஞ்சத்துக்கும் மையப்பகுதியாக கருதப்படுகிறது. கடவுள்களும் தேவர்களும், ஆற்றலின் மூலஸ்தானமாகவும் சக்தியின் ஆதாரமாகவும் விளங்கும் இம்மலையையே வசிப்பிடமாக கொண்டுள்ளனர்.
பிரகாசத்துடன் தங்கமாய் மின்னும் தன்மையுடையதாகவும் பல உயர்ந்த பண்புகளையும் கொண்டதாய் இம்மலை போற்றப்படுகிறது. தெய்வீகத்தன்மை நிறைந்த இம்மலை பார்வைக்கும் அறிவுக்கும் புலப்படுவதாகவும் எட்டக்கூடியதாகவும் மற்ற யுகங்களான துவாபர, த்ரேதா மற்றும் ஸத்ய யுகத்தில் இருந்துள்ளது. கலியுகத்தில் இம்மலை அறிவுக்கும் புலன்களுக்கும் புலப்படுவது  அரிது.
ஸ்ரீசக்கரத்தின் நடுவில் முக்கோணமும், அதன் நடுவில் பிந்துவும் காணப்படும். அந்த பிந்துவில் லலிதாம்பிகை காமேஸ்வரரோடு அமர்ந்து இருக்கின்றனர்.
யோக சாத்திரத்தின் அடிப்படையில், நம் உடம்பில் உள்ள முதுகுத் தண்டில் இருக்கும் சுழுமுனை நாடிக்கு ஸுமேரு என்று பெயர். இதன் நடு சிகரமே ஸகஸ்ரார கமலம். இதன் நடுவில் உள்ள ப்ரம்மரந்திரம் என்னும் ஸ்ரீ நகரத்தில் அம்பிகை வீற்றிருக்கிறாள்.
இவ்வாறு தேவி லலிதாம்பிகை மேரு மலையின் நடுவில் வசிக்கிறாள் என்பதை தான் " ஸுமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா" என்று வாக்தேவிகள் போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

No comments:

Post a Comment