பஞ்ச ப்ரம்மாஸன ஸ்திதா - பஞ்ச ப்ரம்மங்களையும் ஆசனமாக கொண்டவள்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
அம்பிகை சிந்தாமணி கற்களால் கட்டப்பட்ட க்ரஹத்தின் உள்ளே தனது சிம்ஹாஸனத்தில் பஞ்ச
ப்ரம்மாக்களையும் ஆசனமாக கொண்டு இருக்கிறாள்.
ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐவரும் சக்தியோடு சேர்ந்து இருக்கும் போது பஞ்ச ப்ரம்மாக்கள் எனவும், அவர்களே தனித்து இருக்கும் போது பஞ்ச ப்ரேதர்கள் எனவும் கூறுவர்.
ஸ்ருஷ்டிக்கு அதிபதியான ப்ரம்மா, ஸ்திதிக்கு அதிபதியான விஷ்ணு, சம்ஹார தொழிலுக்கு தலைவரான ருத்ரன், திரோபாவத்திற்கு அதாவது மறைத்தல் தொழிலுக்கு தலைவரான மஹேஸ்வரன் ஆகிய நான்கு தேவதைகளும் நான்கு கால்கள். இந்த நான்கு கால்கள் ஒரு பீடத்தை தாங்கி கொண்டிருக்கிறது. அந்த பீடம் தான் சதாசிவன். சதாசிவன் அனுக்கிரஹ தொழிலுக்கு அதிபதி. அதாவது லலிதாம்பிகை அனுக்கிரஹத்திற்கும் மேலே அமர்ந்திருக்கிறாள். இந்த பஞ்ச ப்ரம்மாக்களையும் தன் ஆசனமாக லலிதாம்பிகை கொண்டிருக்கிறாள்.
யோக சாஸ்திரத்தின் அடிப்படையில், நமது சரீரத்தில் மூலாதாரம் என்னும் சக்கரத்தின் அதிபதியான விநாயகர் லலிதாம்பிகையின் பாதுகைகளை தாங்குபவராகவும், ஸ்வாதிஷ்டானம் - மணிபூரகம் - அநாகதம் - விசுக்தி என்னும் நான்கு சக்கரங்களிலும் உள்ள ப்ரம்மா - விஷ்ணு - ருத்ரன் - மஹேஸ்வரன் ஆகிய ஈஸ்வரர்கள் நான்கு தேவி லலிதாம்பிகை சிம்ஹாஸனத்தின் நான்கு கால்கள் என்றும், ஆக்ஞா சக்கரத்தில் உள்ள சதாசிவன் மேற்பலகை என்றும், சிரசில் உள்ள சகஸ்ரார கமலத்தில் அம்பிகை வீற்றிருக்கிறாள் என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறு அம்பிகை பஞ்ச பிரம்மாக்களை தன் ஆசனமாக கொண்டிருக்கிறாள் என்பதை தான் வாக்தேவிகள் "பஞ்ச ப்ரம்மாஸன ஸ்திதா" என்று போற்றுகின்றனர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
லலிதா |
அம்பிகை சிந்தாமணி கற்களால் கட்டப்பட்ட க்ரஹத்தின் உள்ளே தனது சிம்ஹாஸனத்தில் பஞ்ச
ப்ரம்மாக்களையும் ஆசனமாக கொண்டு இருக்கிறாள்.
ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐவரும் சக்தியோடு சேர்ந்து இருக்கும் போது பஞ்ச ப்ரம்மாக்கள் எனவும், அவர்களே தனித்து இருக்கும் போது பஞ்ச ப்ரேதர்கள் எனவும் கூறுவர்.
ஸ்ருஷ்டிக்கு அதிபதியான ப்ரம்மா, ஸ்திதிக்கு அதிபதியான விஷ்ணு, சம்ஹார தொழிலுக்கு தலைவரான ருத்ரன், திரோபாவத்திற்கு அதாவது மறைத்தல் தொழிலுக்கு தலைவரான மஹேஸ்வரன் ஆகிய நான்கு தேவதைகளும் நான்கு கால்கள். இந்த நான்கு கால்கள் ஒரு பீடத்தை தாங்கி கொண்டிருக்கிறது. அந்த பீடம் தான் சதாசிவன். சதாசிவன் அனுக்கிரஹ தொழிலுக்கு அதிபதி. அதாவது லலிதாம்பிகை அனுக்கிரஹத்திற்கும் மேலே அமர்ந்திருக்கிறாள். இந்த பஞ்ச ப்ரம்மாக்களையும் தன் ஆசனமாக லலிதாம்பிகை கொண்டிருக்கிறாள்.
யோக சாஸ்திரத்தின் அடிப்படையில், நமது சரீரத்தில் மூலாதாரம் என்னும் சக்கரத்தின் அதிபதியான விநாயகர் லலிதாம்பிகையின் பாதுகைகளை தாங்குபவராகவும், ஸ்வாதிஷ்டானம் - மணிபூரகம் - அநாகதம் - விசுக்தி என்னும் நான்கு சக்கரங்களிலும் உள்ள ப்ரம்மா - விஷ்ணு - ருத்ரன் - மஹேஸ்வரன் ஆகிய ஈஸ்வரர்கள் நான்கு தேவி லலிதாம்பிகை சிம்ஹாஸனத்தின் நான்கு கால்கள் என்றும், ஆக்ஞா சக்கரத்தில் உள்ள சதாசிவன் மேற்பலகை என்றும், சிரசில் உள்ள சகஸ்ரார கமலத்தில் அம்பிகை வீற்றிருக்கிறாள் என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறு அம்பிகை பஞ்ச பிரம்மாக்களை தன் ஆசனமாக கொண்டிருக்கிறாள் என்பதை தான் வாக்தேவிகள் "பஞ்ச ப்ரம்மாஸன ஸ்திதா" என்று போற்றுகின்றனர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
No comments:
Post a Comment