மஹா பத்மாடவீ ஸம்ஸ்தா - பெரிய தாமரை காட்டில் உறைபவள்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
ஸ்ரீநகரத்தின் நடுவில் 25வது கோட்டைக்கும், சிந்தாமணி க்ருஹத்திற்கும் இடையில் இருப்பதுதான் மஹா பத்ம வனம். இங்கு நிறைந்துள்ள தாமரை பூக்கள் நிலத் தாமரைகளாகும். அதுவும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை பூக்கள். தாமரை பூக்களின் ஒவ்வோர் இதழும் நூற்றுக்கணக்கான முழம் நீளமும் அகலமும் உடையது.
யோக சாஸ்திர அடிப்படையில், நமது உடலில், 6 ஆதாரங்களுக்கு மேல் உச்சியில் ஆயிரம் இதழ்த் தாமரை உள்ளது. சகஸ்ராரம் எனும் சக்கரம். சகஸ்ரார சக்கரத்திற்கு நடுவில் ஒரு துளை வடிவில் இருக்கும் பகுதியை ப்ரம்மாந்திரம் அல்லது மஹாபத்மாடவி என்பர். ப்ரபஞ்சத்தில் உள்ள தெய்வ சக்தி இந்த துளையின் ஊடாக மட்டுமே மனித உடலில் இறங்கும். உலகத்தின் ஊடான தொடர்பு இந்த துளையின் வழியாகத்தான் ஏற்படுகிறது. இந்த துளை ஆறு ஆதாரங்களுடனும் இணைக்க படுகிறது.
குண்டலினி என்னும் ஆற்றலை யோக சாஸ்திர முறைப்படி சிறிது சிறிதாக உயர்நிலைக்கு ஏற்றி கொண்டு போனால் சகஸ்ரார பத்மத்தை அடையலாம். சிவனுடன் லலிதாம்பிகை சசஸ்ராரத்தில் தான் இணைகிறாள். சகஸ்ராரத்தின் நடுவில் உள்ள மஹாபத்மாடவியில், அதாவது பெரிய தாமரைக்காட்டில் தேவி லலிதாம்பிகை உறைகிறாள்.
இவ்வாறு தேவி லலிதாம்பிகை ஸ்ரீநகரத்தில் உள்ள அடர்ந்த தாமரைக் காட்டில் உறைகிறாள் என்பதை தான் "மஹா பத்மாடவீஸம்ஸ்த்தா " என்று போற்றுகின்றனர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
Lalitha |
ஸ்ரீநகரத்தின் நடுவில் 25வது கோட்டைக்கும், சிந்தாமணி க்ருஹத்திற்கும் இடையில் இருப்பதுதான் மஹா பத்ம வனம். இங்கு நிறைந்துள்ள தாமரை பூக்கள் நிலத் தாமரைகளாகும். அதுவும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை பூக்கள். தாமரை பூக்களின் ஒவ்வோர் இதழும் நூற்றுக்கணக்கான முழம் நீளமும் அகலமும் உடையது.
யோக சாஸ்திர அடிப்படையில், நமது உடலில், 6 ஆதாரங்களுக்கு மேல் உச்சியில் ஆயிரம் இதழ்த் தாமரை உள்ளது. சகஸ்ராரம் எனும் சக்கரம். சகஸ்ரார சக்கரத்திற்கு நடுவில் ஒரு துளை வடிவில் இருக்கும் பகுதியை ப்ரம்மாந்திரம் அல்லது மஹாபத்மாடவி என்பர். ப்ரபஞ்சத்தில் உள்ள தெய்வ சக்தி இந்த துளையின் ஊடாக மட்டுமே மனித உடலில் இறங்கும். உலகத்தின் ஊடான தொடர்பு இந்த துளையின் வழியாகத்தான் ஏற்படுகிறது. இந்த துளை ஆறு ஆதாரங்களுடனும் இணைக்க படுகிறது.
குண்டலினி என்னும் ஆற்றலை யோக சாஸ்திர முறைப்படி சிறிது சிறிதாக உயர்நிலைக்கு ஏற்றி கொண்டு போனால் சகஸ்ரார பத்மத்தை அடையலாம். சிவனுடன் லலிதாம்பிகை சசஸ்ராரத்தில் தான் இணைகிறாள். சகஸ்ராரத்தின் நடுவில் உள்ள மஹாபத்மாடவியில், அதாவது பெரிய தாமரைக்காட்டில் தேவி லலிதாம்பிகை உறைகிறாள்.
இவ்வாறு தேவி லலிதாம்பிகை ஸ்ரீநகரத்தில் உள்ள அடர்ந்த தாமரைக் காட்டில் உறைகிறாள் என்பதை தான் "மஹா பத்மாடவீஸம்ஸ்த்தா " என்று போற்றுகின்றனர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam